எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 மே, 2012

மைதானமும் மரமும்..

மைதானம் பொது..
மரமும் பொது..
பலநாளாய்ப் பழக்கம் மைதானத்தோடு.
கால் முளைத்ததிலிருந்து
களமேடை அதுதான்.
விளையாட்டு என்று
வெய்யிலை, மழையை
குளிரைப் பனியைச்
சேர்ந்து சுவைத்திருக்கிறேன் அதனோடு.

விருட்சங்கள் தோறும் ஊஞ்சலாடி
ஊக்க விதைகளை
வாதுமைக் கொட்டைகளைப் போல
உடைத்துத் தின்றதும் அங்குதான்.
பலாவாய் இனிக்கும்
பல மரங்கள்..
இருந்ததும் போனதும்
உறுத்தவோ வலிக்கவோ இல்லை.
இந்த மரத்துக்கும்
எனது வயதிருக்கலாம்..
பூவாய்க் காயாக் கனியாக் கிடந்து
விழுதுகளோடு உருப்பெற்று
விருட்சமாய் பிரம்மாண்டமாய்
பரிமாணித்திருந்தது.
முன்னொருமுறை ஒருத்தி
உரிமைப்படுத்த முயன்றபோது
விரட்டியடித்து விருட்சத்தைத்
தக்கவைத்துக் கொண்டது மைதானம்
தனக்கேயான சொத்தாய்
வளர்ச்சிப் பரிமாணத்தில்
விழுதுகள் வெவ்வேறு திசைகளில்
துளிர்விட்டு வேறூன்ற ஆரம்பித்தன....
பரிணாமத்தின் திசையில்
இடம்பெயர வேண்டிய
கட்டாயம் வந்தது மரத்துக்கு.
நேற்றுவரை மரம் இருந்த இடத்தில்
இன்று மைதானத்தின்
ஈரமண்ணின் நிணமும்
விருட்சத்தின் சல்லிவேர்களும்
பால்துளிகளாய் சிதறிக்கிடந்த
பச்சைக் கவிச்சி வாசமும்
கலந்து கலங்க வைத்தன..
வேறு இடத்தில்
வேரூன்றி இருக்கலாம் மரமும்..
மறந்து விடலாம்
 பலகனிகளோடு குலுங்கும் மைதானமும்..
மைதானங்கள் அங்கேயே இருக்கின்றன.
இடப்பெயர்ச்சி அடையாமல்.,
நிலையாமைத் தத்துவத்தை விளக்கி
அகண்டு கிடந்த பள்ளம்
விளக்கமுடியாத கருந்துளையாய்ப்
படுத்திக் கொண்டே இருக்கிறது
வளர்ந்து விட்ட என்னை இன்னும்..

4 கருத்துகள்:

  1. ///பலகனிகளோடு குலுங்கும் மைதானமும்..
    மைதானங்கள் அங்கேயே இருக்கின்றன.
    இடப்பெயர்ச்சி அடையாமல்.,
    நிலையாமைத் தத்துவத்தை விளக்கி
    அகண்டு கிடந்த பள்ளம்
    விளக்கமுடியாத கருந்துளையாய்ப்
    படுத்திக் கொண்டே இருக்கிறது
    வளர்ந்து விட்ட என்னை இன்னும்.//
    அருமையான கவிதை அக்கா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மரத்தையும் மைதானத்தையும் இத்தனை அழகான கவிதையா ..?

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார்

    நன்றி வரலாற்று சுவடுகள்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...