எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஜனவரி, 2010

குருக்ஷேத்திரம்

எதிர்பாராது
எதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்...
குறிவைத்தோ .,
குறிப்பிட்டதை மட்டுமே சொல்லியோ
எய்யப்பயிலாமல்...
கண்ணனே என் காதலன்.,
சாரதி., சேவகன் ஆனால்
என் போரேல்லாம் அவனுடனே ...

பேரொளியும் பேரிடியும்
மின்னலுமாய் என் மேல் வீழ
கண்ணீரில் கறுத்து நான்...
கூட இருப்பதுவும்...
கூடி முயங்குவதும் ...
கோரப் பொருவதும் ...
வார்த்தை யுத்தத்தில்
நிராயுதபாணியாய்க் காதல் .,
கண்மூடித்தேம்பி ....
எத்தனை துடைத்தும்
போகாத சேறு.,
இது ஊடலா ....?
வாயில் உலகைக் காட்டி .,
என்னையும் அந்த
வாய்க்குள்ளே மட்டும் அடக்கி ....
வெண்ணையும் .,மண்ணையும்
தின்றவன் என்னையும் தின்று ....
கம்சனா .,கர்ணனா .,காளிங்கனா.,.,
அர்ஜுனனா .,பலராமனா., த்ரௌபதையா .,
ராதையா .,பாமாவா .,ருக்மணியா .,
யசோதையா .,தேவகியா .,நான் யார்யாராவோ.,
ஒவ்வொரு சதாப்தத்திலும்
உடலும் .,ஆன்மாவுமாய்
நானும் கண்ணனும் ....

46 கருத்துகள்:

  1. வெண்ணையும் .,மண்ணையும்
    தின்றவன் என்னையும் தின்று ....


    கூட இருப்பதுவும்...
    கூடி முயங்குவதும் ...
    கோரப் பொருவதும் ...
    வார்த்தை யுத்தத்தில்
    நிராயுதபாணியாய்க் காதல் .,
    கண்மூடித்தேம்பி ....




    Nice one madam!!!!

    பதிலளிநீக்கு
  2. //கண்மூடித்தேம்பி ....
    எத்தனை துடைத்தும்
    போகாத சேறு.,
    இது ஊடலா ....?//

    நல்ல வரிகள்.....

    பதிலளிநீக்கு
  3. எதிர்பாராது
    எதிரில் இருப்பவரே
    எதிரியான குழப்பம்............................... காலங்காலமாய் அது தான் நடக்கிறது

    பதிலளிநீக்கு
  4. கண்ணன் வருவான் , கதை சொல்லுவான் ....

    பதிலளிநீக்கு
  5. லக்ஷ்மணன்னு இருக்கு? ஹி ஹி ஹி ...

    பதிலளிநீக்கு
  6. கவிதை...சும்மா கலக்கு கலக்குன்னு கலக்குது..தோழி...
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. வாயில் உலகைக் காட்டி .,
    என்னையும் அந்த
    வாய்க்குள்ளே மட்டும் அடக்கி ....//
    I Like it so much Thenu ..

    பதிலளிநீக்கு
  8. கண்ணன் என் காதலனா....எதிரியா...

    பதிலளிநீக்கு
  9. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

    விஜய்

    பதிலளிநீக்கு
  10. அருமை
    நல்ல நடை
    நல்ல பதிவு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. தீராத விளையாட்டுப் பிள்ளை
    கண்ணனால் ஓயாத தொல்லையோ?

    பதிலளிநீக்கு
  12. காதல் கவிதை தேனுவின் கண்ணனுக்காக.
    எப்பவும்போல அசத்தல் காதல்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி தினேஷ் ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் தினேஷ்

    பதிலளிநீக்கு
  14. நன்றி செல்வா
    டிசம்பர் 21 க்கு அப்பறம் ஒண்ணும் எழுதல போல இருக்கு சினிமா ஆரம்பிச்சுருச்சா

    பதிலளிநீக்கு
  15. நன்றி சங்கவி தலைவாழை இலையும் அந்தியூரும் அருமை

    பதிலளிநீக்கு
  16. நன்றி அஷோக்

    உங்க வலைத்தளத்தில் தான் கன்னம் போன்ற இட்லியும் தேன் போன்ற மீன் குழம்பும் பார்த்தேன் சுவைத்தேன்

    பதிலளிநீக்கு
  17. நன்றி தமிழுதயம்

    எதிரி எங்கேயும் இல்லை

    நமக்குள்ளேயும் இருக்கிறா(ன்)ள்

    விளையாட்டு வினையாகும் என்பது சரிதான் தமிழுதயம்

    பதிலளிநீக்கு
  18. நன்றி ஸ்டார்ஜன்

    குழந்தைக்கு பிறந்த நாளா ஸ்டார்ஜன் நல்லா இருக்கு கவிதை

    பதிலளிநீக்கு
  19. விதூஷி உங்க கண்ணன் ராதை கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  20. நன்றி ஹைஸ்பீட் கந்தசாமி முழு சாக்லேட்டுக்கு

    பதிலளிநீக்கு
  21. நன்றி நேசன்

    என்ன புகைப்படத்தை மாத்தீட்டீங்களே என்ன பொங்கல் ரிலீசா..??

    பதிலளிநீக்கு
  22. நன்றி கமலேஷ்

    நீரியல் சுழற்சி ரொம்ப அருமை கமலேஷ்

    பதிலளிநீக்கு
  23. சாலை பாதுகாப்பு பற்றி ஒரு அருமையான இடுகை போட்டு இருக்கீங்க வினோத்
    நன்றி

    பதிலளிநீக்கு
  24. நன்றி கோபி

    ஹெல்த் சென்டர் பற்றியும் மல்டி லெவெல் மார்க்கெட்டிங் பறியும் அருமையாய் சொல்லி இருக்கீங்க
    பகிர்வுக்கு நன்றி

    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை நினைவில் கொண்டால் வாழ்வில் எல்லாம் நலமே

    பதிலளிநீக்கு
  25. நன்றி வேல் கண்ணன்

    அருமை வேல்கண்ணன்

    பாரா சொன்னதை வழி மொழிகிறேன் உங்களுக்குகென்று ஒரு இடம் இருக்கு

    பதிலளிநீக்கு
  26. நன்றி ராம்


    உண்மை அரசியலில் நாகரீகம் குறைந்துதான் போய்விட்டது

    பதிலளிநீக்கு
  27. நன்றி விஜய் பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. நன்றி தியா

    கண்ணி வெடியில் காலிழந்து ரொம்பக் கொடுமை தியா

    பதிலளிநீக்கு
  29. நன்றி பாலா

    அருமையான கவிதைகள் எழுதி வெளியிடுகிறீர்கள்

    வெளிநாட்டுப் பயணம் இத்தனை விருதுகள் எல்லாவறிற்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள் பாலா

    பதிலளிநீக்கு
  30. ஹேமா போட்டிக் கவிதை சூப்பர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  31. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...