எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 அக்டோபர், 2009

விதி வலியது

ஆமாம்..
கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என்னை
சகோதரர் மணிகண்டன் தன்னுடைய தமிழ்
வலையுகத்தில் தொடர் இடுகை ஒன்று
எழுத அழைத்து இருந்தார்...
அவரின் அன்பு அழைப்புக்கு இணங்க
இதோ உங்கள் முன்பு எனது படைப்பு...

1. A- Available/single - single ....ABYAN என் மனம்
கவர்ந்த குட்டிப்பையன் ...
ஊசி போட்டு சின்னதாக மட்டும் சிணுங்கி
தன் தந்தைக்கு வலிக்க வைத்தவன்

2. B - Best friend - எல்லோரும்

3. C- Cake or pie - ரெண்டும்

4. D - Drink of choice - ஆரஞ்சு ஜூஸ்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

டேபிள் ரோஸ்

என்னுடைய அன்பை
கவசமாகவும் சேணமாகவும்
தாலியாகவும் மோதிரமாகவும் மாட்டி
அழகாய் இருக்கிறாய்
என்கிறேன்....

நீ வலிகளைப்
பற்களுக்குள் ஒளிப்பதை
புன்னகைப்பதாக எண்ணி
மகிழ்கிறேன்....

வேப்பம் பூ

சூடிக்கொள்பவன் இல்லாமல்
மழையில் கரைந்து
நிலவு....

காண்போரே இல்லாமல்
பூப்பள்ளத்தாக்கு....
தனிமைக்குப் பயந்து
கூட்டமாய்ப் பூத்து....

புதன், 28 அக்டோபர், 2009

போகன் வில்லாப் பூக்கள்

மாண்டிஸோரியின் குடில்களில்
வளைந்து பரவி இருந்தது
போகன்வில்லா....

தினம் ஒரு பூப்பறித்து
உதட்டில் வைத்துத் தேய்ப்போம்
ரைம்ஸில் வரும் ரோஸி லிப்ஸ்
ஆகுமாவென்று....

வியாழன், 22 அக்டோபர், 2009

நீலோத்பவம்

பர் துபாயின் பேரழகே
நீல வைரமே ...
தேரா க்ரீக்கின் ஆப்ராவில்
உனைக்காண...

யமுனையின் ராதையாயும்
மீராவாகவும் ஆண்டாளாகவும்
சதுர்யுகமாய் உனைத்தேடி...
Related Posts Plugin for WordPress, Blogger...