இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே என்ற எந்திரன் பாட்டைக் கேட்டிருப்பீங்க. இங்கோ ஜெர்மனியில் எல்லாமே இரும்புதான். இந்த நாட்டோட அபார வளர்ச்சிக்கு இங்கே அமோகமாகக் காணப்படும் இரும்புத் தாதுவும் முக்கியப் பங்கு வகிக்குது. அதுனால இவங்க இரும்புல சிற்பமெல்லாம் செய்து வைச்சிருக்காங்க மங்க்ஸ்டன் ரயில்வே பாலத்துக்குப் போற வழியில்.
ஜெர்மனியின் ஏன் யூரோப்பின் மிக உயர்ந்த மங்கஸ்டன் ரயில் பாலத்தை கௌசியும் அவர் கணவர் சிவபாலன் அவர்களும் தங்கள் காரில் அழைத்துச் சென்று காண்பித்தார்கள். மிக மிக அண்ணாந்து பார்க்கும் அளவில் உயரமானதுதான். 1897 இல் இரண்டாம் வில்லியம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.
ஜெர்மனியின் ஏன் யூரோப்பின் மிக உயர்ந்த மங்கஸ்டன் ரயில் பாலத்தை கௌசியும் அவர் கணவர் சிவபாலன் அவர்களும் தங்கள் காரில் அழைத்துச் சென்று காண்பித்தார்கள். மிக மிக அண்ணாந்து பார்க்கும் அளவில் உயரமானதுதான். 1897 இல் இரண்டாம் வில்லியம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.
இது மங்ஸ்டனில் வூப்பர்டால் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஸோலிங்கனுக்கும் ரெம்ஷய்ட் என்னுமிடத்துக்கும் நடுவில் உள்ளது. அங்கேதான் இந்த விதம் விதமான வார்ப்பிரும்புச் சிற்பங்களையும் கண்டு களித்தோம்.
பாலத்தைத் தரிசிக்குமுன் இந்த சிற்பங்களையும் கொஞ்சம் கண்டு களியுங்கள். ஏனெனில் இரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஜெர்மனி இரும்பு மனிதர்கள் நிறைந்த ஊரும் கூட.
