காரைக்குடி கழனிவாசலில் அமைந்துள்ளது இடைச்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் 1989 ஆம் வருடம் யாதவ சமூகத்தினரால் அமைக்கப்பட்டது.
கோபுரத்தில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணரும் துவாரபாலகியரும் சிங்கங்களும் காவல் தேவதைகளும் காட்சி அளிக்கிறார்கள்.
கோயிலின் இடப்புறம் ஸ்ரீ நாகநாதருக்குக் குட்டியாகத் தனிச்சந்நிதி.