எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வானவன் மாதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானவன் மாதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜனவரி, 2017

ஆதவன் மறைவதில்லை.


ஜனவரி பதினைந்தாம் தேதி இரவு ஒரு துயரச்செய்தியை ”லவ்லி லேடீஸ்” வாட்ஸப் குழுமத்தில் தோழி அகிலா பகிர்ந்திருந்தார். நம் அன்புக்குரிய வானவன் மாதேவி அவர்கள் இயற்கை எய்திய செய்திதான் அது. உண்மையை ஏற்றுக் கொள்ளாது அதிர்ந்தது நெஞ்சம். திரும்ப நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அதை உறுதிப்படுத்தினார் தோழி எழில் அருள்.

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இறந்த அனுராதாவைப் பற்றி என்னுடைய சாதனைஅரசிகள் நூலில் எழுதி இருக்கிறேன். இவர்களைப் பற்றி தோழி கீதா இளங்கோவன் முகநூலில் தனித்தகவலில் பகிர்ந்தவுடன் இவர்களின் பேட்டி வேண்டி இன்பாக்ஸில் தொடர்பு கொண்டேன். 

இவர்களிடம் என்னை அணுக்கமாக உணரச் செய்ததே இவர்களின் பேரும் இலக்கிய ஆர்வமும்தான். தன்னம்பிக்கை மிக்க பெண்ணரசிகள். முதலில் இயல் இசை வல்லபியிடமும் அதன் பின் வானவன் மாதேவியிடமும். ஆனால் ஏனோ பேட்டியாக வெளியிட சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. 

12.10 2014 இல் நான் அவரிடம் கேட்ட கேள்விகள்.


////நீங்க ரெண்டு பேரும் எந்தத் தருணத்தில் இப்படி ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்னுமுடிவெடுத்தீங்க ? 


உங்களோடு கரம் கோர்த்து செயல்படுவது யார்
இன்னிக்கு வரைக்கும்.?


அந்த நெகிழ்ச்சியான தருணத்தையும் அந்த நபர்களைப் பத்தியும் பகிருந்துக்குங்க.


மேலும் ஆதவ் ட்ரஸ்டுக்கான இடம் கட்டிடம் சம்பந்தமாவும் சொல்லுங்க


ஏன் ஆதவ் நு பேர் வச்சீங்க./////


இதற்கு பிஸியாக இருப்பதால் பின்னர் பதில் அளிப்பதாகக் கூறி  இருந்தார். 

தோழி கீதா அனுப்பிய உள்டப்பித்தகவல்.

 ////இந்நோயால் இயங்கும் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டு, கடைசி கட்டத்தில் நோயாளி மரணமடைகிறார்.
இந்நோயின் மூலக்காரணம் மரபணு என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இந்நோய்க்கான மருந்து இன்றுவரை கண்டறியப்படவில்லை என்பதே மிக வேதனை தரும் செய்தி.


தம்மைப் போல இந்நோயால் பாதிக்கப்பட்ட, வசதியற்ற நோயாளிகளுக்கு இந்த சகோதரிகள் மாற்று மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளிக்கிறார்கள். இதற்கென சேலத்தில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.


வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி பற்றிய `நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படம் வியாபார நோக்கம் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகமான மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு வாழ்வின் நல்ல சங்கதிகளின் மீது நம்பிக்கை மிகுதிப்படும். இவர்கள் நடத்தும் பொதுத்தொண்டுக்கு உதவவும் வாய்ப்பாகும்.


இக் குறும்பட வெளியீட்டு விழாவை, இம்மாதம் 22ம் தேதியன்று (சனிக் கிழமை) காலை 10 – 12 மணிக்கு முகநூலில் நடத்த இருக்கிறோம், உங்கள் முன்னுரை விமர்சனத்தோடு அந்த வெளியீட்டு விழா தொடங்க வேண்டும் என விரும்புகிறோம்.


படத்தின் youtube link இது : https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4
படத்தை பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை விமர்சனமாக எழுதுமாறும், வெளியீட்டு விழா நிகழும் 22 ந் தேதி அன்று உங்கள் பக்கத்தில் நிலைத்தகவலாக அந்த விமர்சனத்தைப் பதிவு செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி.
தோழமையுடன்
கீதா இளங்கோவன்////

/////அன்புக்குரிய நண்பர்களுக்கு, எங்களைக்குறித்த ஒரு ஆவணப்படம் "நம்பிக்கை மனுஷிகள்" என்னும் தலைப்பில் கீதா இளங்கோவன் மேம் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் வெளியீடு நாளை உங்களுக்கு மிகவும் பிடித்த (உங்களை அடிமையாக்கி வைத்திருக்கிற :P) இந்த முகனூலில் காலை 10.00-12.00 மணிக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் Link உங்களில் சில நண்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த படத்தைப்பார்த்தவர்கள் அது குறித்த விமர்சனத்துடன் அந்த linkஐ நாளை காலை 10 மணிக்கு மேல் உங்கள் முகனூல் பக்கத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி:)////

குறிப்பு: வீடியோவின் linkஐ நிச்சயம் நாளை காலைதான் வெளியிடனும்  அதுவரை சஸ்பென்ஸ் ஆக நம்மிடம் மட்டுமே இருக்கட்டுமே , ப்ளீஸ்:)



பொதுவாக நான் அப்சர்வ் செய்த வகையில் சேலமும் அதைச் சார்ந்த ஊர்களிலும் பிறக்கும் பெருவாரியான குழந்தைகள் இந்நோய்த் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். மரபணு மாற்றப் பயிர்கள் , உரங்கள், இரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் தெளித்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொண்ட தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள் இந்நோயால் அதிகம் பாதிப்படைந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் இதற்கெல்லாம் தீர்வு என்ன என்பதுதான் தெரியவில்லை. 

நம் நாட்டைச் சிதைக்கும் குளோபல் வியாபாரிகள் வெளியேற்றப் பட்டால்தான் இயற்கை விவசாயமும் விவசாயியும் நாமும் பிழைக்கலாம். 

செவ்வாய், 2 டிசம்பர், 2014

வல்லபி , மாதேவி - நம்பிக்கை மனுஷிகள்.



கோவையில் சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருந்த தெருவில் கடைசியில் இருந்த வீட்டில் இரு பெண்கள் இருந்தார்கள். இருவருமே கல்லூரியில் பயில்பவர்கள். ஒரு நவராத்திரி சமயம் சகோதரிகளில் மூத்தவர் எங்கள் தெருவின் முக்கில் கால் தடுக்கி விழுந்துவிட்டதாக என் மாமியார் சொன்னார்கள்.

அந்தப் பெண் மிகவும் மெலிவாக இருப்பார். என்ன காரணம் என்று தெரியவில்லை. அதே போல் சில நாட்களில் அவரின் சகோதரியும் கல்லூரிக்கு  நடந்து செல்லும்போது கீழே விழுந்துவிட்டார். போலியோவுக்கு சின்னப் பிள்ளையில் மருந்து கொடுக்காவிட்டால் அது இப்படி பெரிய பிள்ளையானதும் கூட பாதிக்கும் என்று பேசிக் கொண்டார்கள் மக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...