எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மாமல்லபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாமல்லபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2018

மாமல்லபுரம் கலைச் சிற்பங்கள்.


மாமல்லபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை இருக்கிறது. அங்கே பல்வேறு வகையான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் அன்று அங்கு செல்ல அனுமதி இல்லை. கிடைத்தவற்றை சுட்டிருக்கிறேன். அதோடு முன்பே எடுத்தவையும் வருகின்றன. 

சுவரில் செதுக்கப்பட்ட எல்லா சிற்பங்களின் மேலும் சித்திரக்குள்ளர்கள் காட்சி அளிப்பது அழகு. பல்லவப் பேரரசன் மாமல்லன் நரசிம்மனின் சிற்பம் மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்க மற்றவை எல்லாம் சுண்ணாம்பு/வண்ணம் அடிக்கப்பட்ட மாதிரி இருக்கின்றன. சிம்ம யாளிகளும் தூண் நாகங்களும் ( காரைக்குடித் தூண்கள் போல ) காட்சி அளிப்பது சிறப்பு. 

இனி இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் குறிப்புகள் தொடர்கின்றன. 

வியாழன், 24 மே, 2018

மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.


மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். 

பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. 

முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் ( கி. பி. 630 – 638 ) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.

இயற்கையான பாறையைச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர்போல காட்சி அளிப்பதால் அவை இரதம் எனப்படும்.
Related Posts Plugin for WordPress, Blogger...