மனத்தின் பேராற்றல் - ஒரு பார்வை.
மனத்தின் பேராற்றல்
தனது
யோக வாழ்க்கையை அடிப்படையாக வைத்து யோகாசார்யா எஸ் ஜனார்த்தனன் என்பவர் எழுதிய
நூல்தான் மனத்தின் பேராற்றல். உடல் நலத்தோடு உள்ள நலனையும் கைக்கொண்டால் மனதின்
பேராற்றலை உணரலாம் அதனை செயல்படுத்தலாம் என்கிறார் இவர். மூன்றில் ஒருபங்கு
மூளையையே நாம் இதுவரை உபயோகித்து வருகிறோம் என்கிறார். மூளையின் முழுமையான
செயல்பாட்டுக்கு இவர் தரும் வழிமுறைகளைப் பார்ப்போம்.
உள்மனம், வெளிமனம், பிரணாயாமம், தியானம், செயல்பாடு என இவர் வடிவமைத்துத் தருகிறார். எல்லாவற்றுக்கு மூல காரணம் உள்மனமே என்பது இவர் கருத்து. அந்த உள்மனத்தின் பேராற்றலை யோகத்தின் மூலம் எப்படி அடையலாம் என்ற கையேடே இந்நூல்.
