எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 நவம்பர், 2020

நண்டு

 நண்டு


கடற்கரையோர நகரம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்கள் மாலதியின் தம்பிகள். இன்னும் திருமணமாகவில்லை. அவர்களுக்கு சமைத்துப் போட அவர்கள் பாட்டி வீட்டில் இருந்து சிகப்பி அக்காவை அனுப்பி இருந்தார்கள். தன் பிள்ளைகளோடு கோடை விடுமுறைக்குத் தம்பிகள் வீட்டுக்கு வந்திருந்தாள் மாலதி. 

நண்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் சிகப்பி அக்கா. ”வெள்ளையாத்தானேக்கா இருக்கு இந்த நண்டு. இது எப்பிடி சமைச்சோடனே சிவப்பா ஆகுது ” என்று கேட்டாள் பக்கத்தில் அமர்ந்து நண்டு சுத்தம் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாலதி.

“இது கடல் நண்டு. சட்டில போட்டு வதக்குனவோடனே சூட்டுக்கு செவப்பாயிரும். அம்மாப்பொண்ணு இங்க உக்காராதே. சுத்தம் செய்யும்போது பார்த்தாச் சாப்பிட மாட்டே “ என்று சொல்லிக் கொண்டே நண்டின் கால்களைப் பிரித்து ஓட்டை உடைத்து மஞ்சள் பகுதியைக் கையால் தேய்த்துக் கழுவினார் சிகப்பியக்கா.

தண்டட்டிக் காது அசைய அமர்ந்திருந்த சிகப்பியக்கா பேருக்கேற்றாற்போல வெள்ளைச் சிகப்பு. மாலதியின் பாட்டி வீட்டில் கிட்டத்தட்ட 30 வருடமாக சமையல் வேலை செய்தவர். பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சிகப்பி அக்காளின் கைவண்ணத்தில் விதம் விதமான உணவுகளை ருசித்திருக்கிறார்கள் மாலதியும் அவள் தம்பிகளும். திடீரென எவ்வளவு பேர் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் உணவு தயாரிப்பதில் அசந்ததேயில்லை சிகப்பியக்கா.

வேலை ஓய்ந்த பகல்பொழுதுகளிலும் திருகையில் உப்புமாவுக்கு உடைப்பது, குந்தாணியில் சிவப்பரிசி போட்டு உரலால் புட்டு இடிப்பது , சாயங்காலமானால் பச்சரிசி மாவில் தேங்காய் திருகிப் போட்டு சீடை உருட்டுவது, கயிறில் கோர்த்து உப்புக்கண்டம் காயப்போடுவது, வற்றல் போடுவது  என ஏதாவது செய்து கொண்டே இருப்பார். ஒருநாள் கூட மதியத்தில் அந்த அக்கா ஓய்ந்து உறங்கிப் பார்த்ததேயில்லை மாலதி.

Related Posts Plugin for WordPress, Blogger...