நம்மேல் நம்பிக்கை வைத்து ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்துப் பாதுகாப்பாய் வைக்கச் சொன்னால் அதன்படி வைத்து அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுதான் தர்ம நியாயம். ஒரு வேளை அது தொலைந்துவிட்டால் அதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்படி ஒரு சிவயோகி கொடுத்த திருவோடு தொலைந்ததால் நீலகண்டம் என்பவர் பட்ட இன்னல்களைப் பார்ப்போம் குழந்தைகளே.
