தானமாகத் தன்னையேயீந்த ததீசி முனிவர்
சரஸ்வதி நதி ஓடிக்கொண்டிருந்த வேத காலம் அது. வாய்மைக்கும் தவத்துக்கும்
சீலத்துக்கும் பெயர்பெற்ற ததீசி முனிவர் சிட்டிதேவிக்கும்
அதர்வண மகரிஷிக்கும் மகனாகப் பிறந்தார். தன் தபோபலத்தால் சுக்கிரனிடம் இருந்து மிருத
சஞ்சீவி பெற்றவர். மேலும் அவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வஜ்ஜிரம் போன்று
உறுதியான உடல் மற்றும் எலும்புகள் பெற்றார்.
இவரது மனைவி சுவர்ச்சா. தன் மனைவியுடன் சேர்ந்து ஔபாசனம், அக்னி ஹோத்ரம், தேவர்கள் பூஜை, பிதுர்க்கள் பூஜை, அதிதி பூஜை அனைத்தையும் நியம நிட்டை தவறாது செய்துவந்த ஒழுக்கசீலர் ததீசி முனிவர். இவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஆனால் அதனால் பலருக்கும் நன்மை ஏற்படும் என்பதால் எதற்கும் கலங்காமல் தன் வஜ்ஜிர யாக்கையைத் துறந்து தன்னையே ஈந்தவர் இவர் என்றால் வியப்பு ஏற்படும். அது பற்றிப் பார்ப்போம்.
