எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஒன்பதாம் பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒன்பதாம் பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 அக்டோபர், 2014

தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்..

81. பருவமே புதிய பாடல் பாடு..

சுகாசினியும் மோகனும் ட்ராக் சூட்டில் செம ஃபிட்டாக ஒரு பூங்காவில் ஜாகிங் ஓடும்போது பின்னணியில் ஹார்ட் பீட் போல் ஒலிக்கும் பாடல். இதன் ரிதமும் பாடல்வரிகளும் அழகு. பதின்பருவங்களில் அடிக்கடி ஹம் பண்ணிய பாடல். ( ஆமா இப்ப மோகனும் சுகாசினியும் எங்க இருக்காங்க.)

82. அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா.

மலேசியா வாசுதேவனின் குரலில் அருமையான பாடல். மகேந்திரன் படம். அஸ்வினியும் சந்திர சேகரும் என நினைக்கிறேன்.  மசூதியும் டோம்களும் மாடங்களும் குதிரைவண்டியும் வெளிச்ச ஓவியமும் அழகு. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள். என்ற வரி பிடிக்கும், :)


83.அத்தைக்குப் பிறந்தவளே..

செம இளமைப் பாடல்.  ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே என்று பாடல் ஆரம்பிக்கும்போது சேர்ந்து உரக்கப் பாடுவது உண்டு ஹாஹா. விக்னேஷும் அவரின் அத்தை மகளும் ( நடிகையின் பெயர் மறந்துவிட்டது .) அத்தையும் மாமனும் சுகம்தானா ஆத்துல மீனும் சொகம்தானா. அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா.. என்ற வரிகள் செம.(ஸ்டூடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சினிமாக்கள் சரித்திரத்தை 75 களில் மாற்றி கிராமங்களின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து நம்மை இயற்கை நேசர்களாக மாற்றிய பாரதிராஜா இப்ப என்ன செய்றார்.. )

84. நலம் .. நலமறிய ஆவல்.

காதல் கோட்டையில் தேவயானியும் அஜீத்தும் பாடும் பாடல். இவர் ஊட்டியிலும் அவர் ஜெய்ப்பூரிலும் இருக்க. மென்மையான குளிரும் இதமான வெய்யிலும் மாறி மாறி அடித்தது போன்ற சுகம் இருக்கும் இந்தப் பாடலில். மென்மையான காதல்.

85. தீர்த்தக் கரையினிலே..

Related Posts Plugin for WordPress, Blogger...