தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் முன்பே சாபம் பெற்ற ஒருவன் இன்னொருவரின் குறையைத் தீர்க்க முடியுமா ? அதுவும் தான் பிழைப்பதே அரிதாக இருந்தபோது எப்படி இன்னொருவருக்கு ஆரோக்கியத்தை அளித்தான் ஒருவன் என்று பார்ப்போம் குழந்தைகளே.
விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உருவானவர் பிரம்மா. இவரது மகன்கள் சப்தரிஷிகள் எனப்படும் எழுவர். அவர்களின் ஒருவரான மரீசி என்பவரின் மகன் கசியபர். இவர் மனைவியின் பெயர் அதிதி. இவர்கள் இருவரும் ஒரு கானகத்தில் வசித்து வந்தார்கள்.
தர்மம் தவறாமல் வாழ்ந்து வந்தார்கள் அத்தம்பதிகள். சிறிது நாட்களில் அதிதி கர்ப்பமுற்றார். ஒரு நாள் கசியபர் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு முதியவர் வந்து யாசகம் கேட்டார். கர்ப்பத்தின் காரணமாக அதிதியின் வயிறு பெரிதாக இருந்ததால் உடனே எழுந்து சென்று அந்த முதியவருக்கு உணவு படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
