பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளேன். அவை பற்றி இங்கே.
1. நாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்தது. ) “விழுதல் என்பது எழுகையே “ என்ற புதினம் நூலாக்கம் பெற்றுள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா, இலங்கை, ஐரோப்பா ( ஜெர்மனி, சுவிட்ஜர்லாந்து, ஃப்ரான்ஸ், இத்தாலி ) கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துத் ”தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின்” திரு கந்தையா முருகதாசன் அவர்களும், ஊடக வித்தகர் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் - ஒரு வருடக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய கதைக்கருவைக் கொண்டு - ஜெர்மனியிலிருந்து இந்நூலைக் கொண்டு வந்துள்ளார்கள்.
இருபத்தி ஆறு வாரம் தொடர்ந்து ஒவ்வொரு எழுத்தாளர்களாக இக்கதையைக் கொண்டு சென்றோம். நிறைவுரைப் பகுதியை நான்கு எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள் என்பது சிறப்பு.
அதில் நானும் ஒருத்தியாகத் திரும்பப் பங்களிப்புச் செய்துள்ளேன் என்பது மகிழ்வு. அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் அனைவருக்கும்.
நூலை இலங்கையில் பதிப்பித்துள்ளார்கள்.
ஜீவநதியின் 177 ஆவது வெளியீடாக 'விழுதல் என்பது எழுகையே...' (நாவல்) தமிழ் எழுத்தாளர் இணைய அகத்துடன் இணைந்து வெளியாகிறது.
விலை - 450/-
பக்கம் - 292
நூல் தேவைப்படுவோர்
விலை - 400.00
தொடர்புகளுக்கு - 0775991949 அல்லது முகப்புத்தக உள் பெட்டியில் தொடர்பு கொள்ளலாம்.
comercial bank - nelliady - a/c - 8108047197 பணத்தை வைப்பு செய்து மேற்குறித்த இலக்கத்துக்கு வைபர் மூலம் அல்லது முகப்புத்தக உள் பெட்டியில் வைப்பு செய்த receite ஐ அனுப்பினால் புத்தகம் அனுப்பப்படும். உங்கள் விலாசத்தையும் .
2.///வணக்கம் சகோ.. நலம் தானே.
ஆரூர்உங்களுடைய கட்டுரை என்னுடைய அறத்துக்கு அப்பால் நூலில் வந்தி்ருக்கிறது. (எழுத்து பிரசுரம்)///
//பின்னல்களும் இடைவெளிகளும் என்ற நூலுக்காக நண்பர் திரு ஆரூர் பாஸ்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதியது. அது அறத்துக்கு அப்பால் என்னும் நூலில் வெளியாகி உள்ளது. நன்றி பாஸ்கர் சகோ & எழுத்து பிரசுரம். //
பெண் என்பதால் இன்னின்னவற்றைச் சொல்லலாம். இன்ன விதத்தில் சொல்லலாம் என்பதையே இச்சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது. எல்லாவற்றிலும் பாலிஷாக நாசுக்காகப் பட்டும்படாமல் கருத்துச் சொல்லிச் சென்றால்தான் பொதுவெளியின் மிரட்டல்களில் இருந்தும் அச்சுறுத்தல்களில், வீணான விமர்சனங்களில், எள்ளல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
நான் கல்லூரிப் பருவத்துக்குப் பின் கடந்த பன்னிரெண்டு வருடமாக வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். அதை முகநூலிலும் பகிர்ந்து வருகிறேன்.
வலைத்தளத்தில் நம் எழுத்தை ஆதரிப்போர் அதிகம். ஏனெனில் பின்னூட்ட மட்டுறுத்தல் போட்டிருப்பதால் கருத்துத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் முகநூலில் நம் பதிவு பலரையும் சென்று அடைய வேண்டுமென விரும்புவதால் பப்ளிக் போஸ்டாகப் போடுகிறோம்.
இதை நமக்குத் தெரியாத பலர் அவர்கள் பக்கங்களில் தங்கள் நண்பர்களுக்கு மட்டும் எனப் பகிர்ந்து நம் எழுத்தைக் குறித்துக் கிண்டலாகப் பின்னூட்டமிடுவார்கள். நம் பதிவை யார் பகிர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கூட முகநூல் நமக்குக் காட்டுவதில்லை.
மேலும் கருத்தின்மீது வன்மம் அல்லது எள்ளல். இது குறித்து எனக்கேற்பட்ட இரு அனுபவங்கள்.
3.தினமணி சிவசங்கரி - சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகளில் ஒன்றான ”வாடாமலர் மங்கை” என்ற என்னுடைய சிறுகதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
நன்றி தினமணி & வானதி பதிப்பகம். "கானல்நீர் காட்சிகள் “.4.பெண்மை போற்றுதும் தொகுப்பில் எனது கட்டுரை.
நமது மண்வாசம் வெளியிட்டுள்ள நூல் ”பெண்மை போற்றுதும்”. இது பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடு. இதன் தொகுப்பாசிரியர்கள் பிரபல பத்ரிக்கையாளர். திரு. ப. திருமலை & திரு. இரா. சிவக்குமார். இந்நூலின் விலை ரூ. 50/-

மருத்துவம், சட்டம், தொழில், சுற்றுச்சூழல்,அதிகாரமளித்தல், ஆளுமை ஆகிய பல்வேறு தலைப்புகளில் உள்ள 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் ஒரு கட்டுரையாக எனது “பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும் “ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது.
வழக்கறிஞர் சூ. பாலசுந்தரி அணிந்துரையும், தானம் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலர் அ. உமாராணி வாழ்த்துரையும், பதிப்பாளர் பி. கிருஷ்ணமூர்த்தி பதிப்புரையும் நல்கி இருக்கிறார்கள்.
கரைந்து போகும் பெண் இனம், நாற்பது வயதுக்குமேல் வாழவேண்டிய வாழ்க்கை, திறந்தவெளிக் கழிப்பறை, அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோய், துரித உணவின் கெடுதல்கள், பெண்களுக்கான உதவித் திட்டங்களும், உதவும் சட்டங்களும், சட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பா ? குடும்ப வன்முறை சட்டம் வெற்றியா தோல்வியா ? தொழிலுக்குப் பணம் மட்டும் போதாது, வேலை அல்ல இது வேள்வி, அதிகார மையங்களில் பெண்களின் இடம், சுமங்கலி திட்டம், அறுபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெண் வங்கி, பனிமலை வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கியவர், ஆசிரியராவதற்காய் அனைத்தையும் தாங்கியவர், இவர்களால் விருதுக்குப் பெருமை, கடல் இவர்களால் காப்பாற்றப்படுகிறது, பெண் கையில் நிர்வாகம், விளையாட்டுப் பொம்மைகளில் பாகுபாடு, வெற்றிக்கு உடல் மொழி அவசியம், எங்கள் சுதந்திரம் எங்கிருக்கிறது , பெண்ணடிமைத்தனம் நலிவது எப்போது ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
இவற்றை டாக்டர் பா. பங்கஜவல்லி, அருட்சகோதரி வனச்செல்வி, வழக்கறிஞர் ஞா. பாலசுப்ரமண்யம், எழுத்தாளர் தேனம்மைலெக்ஷ்மணன், ( நான், ), டாக்டர் பி. மங்களம், வழக்கறிஞர் செல்வகோமதி, வழக்கறிஞர் வாசிதா, வங்கி மேலாளர் பானுமதி, ஆசிரியை ஹெலனா எட்வின், பெண்ணிய ஆய்வாளர் மேரி கிரிஸ்டபெல், சுபா பிரபாகர் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.
இவற்றைத் தொகுத்து சரியான முறையில் எடிட் செய்திருக்கும் பத்ரிக்கையாளர் ப. திருமலை, & சிவக்குமார் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது.
நமது மண்வாசம் வெளியிட்டுள்ள நூல் ”பெண்மை போற்றுதும்”. இது பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடு. இதன் தொகுப்பாசிரியர்கள் பிரபல பத்ரிக்கையாளர். திரு. ப. திருமலை & திரு. இரா. சிவக்குமார். இந்நூலின் விலை ரூ. 50/-

மருத்துவம், சட்டம், தொழில், சுற்றுச்சூழல்,அதிகாரமளித்தல், ஆளுமை ஆகிய பல்வேறு தலைப்புகளில் உள்ள 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் ஒரு கட்டுரையாக எனது “பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும் “ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது.
வழக்கறிஞர் சூ. பாலசுந்தரி அணிந்துரையும், தானம் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலர் அ. உமாராணி வாழ்த்துரையும், பதிப்பாளர் பி. கிருஷ்ணமூர்த்தி பதிப்புரையும் நல்கி இருக்கிறார்கள்.
கரைந்து போகும் பெண் இனம், நாற்பது வயதுக்குமேல் வாழவேண்டிய வாழ்க்கை, திறந்தவெளிக் கழிப்பறை, அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோய், துரித உணவின் கெடுதல்கள், பெண்களுக்கான உதவித் திட்டங்களும், உதவும் சட்டங்களும், சட்டம் பெண்களுக்குப் பாதுகாப்பா ? குடும்ப வன்முறை சட்டம் வெற்றியா தோல்வியா ? தொழிலுக்குப் பணம் மட்டும் போதாது, வேலை அல்ல இது வேள்வி, அதிகார மையங்களில் பெண்களின் இடம், சுமங்கலி திட்டம், அறுபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெண் வங்கி, பனிமலை வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கியவர், ஆசிரியராவதற்காய் அனைத்தையும் தாங்கியவர், இவர்களால் விருதுக்குப் பெருமை, கடல் இவர்களால் காப்பாற்றப்படுகிறது, பெண் கையில் நிர்வாகம், விளையாட்டுப் பொம்மைகளில் பாகுபாடு, வெற்றிக்கு உடல் மொழி அவசியம், எங்கள் சுதந்திரம் எங்கிருக்கிறது , பெண்ணடிமைத்தனம் நலிவது எப்போது ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
இவற்றை டாக்டர் பா. பங்கஜவல்லி, அருட்சகோதரி வனச்செல்வி, வழக்கறிஞர் ஞா. பாலசுப்ரமண்யம், எழுத்தாளர் தேனம்மைலெக்ஷ்மணன், ( நான், ), டாக்டர் பி. மங்களம், வழக்கறிஞர் செல்வகோமதி, வழக்கறிஞர் வாசிதா, வங்கி மேலாளர் பானுமதி, ஆசிரியை ஹெலனா எட்வின், பெண்ணிய ஆய்வாளர் மேரி கிரிஸ்டபெல், சுபா பிரபாகர் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.
இவற்றைத் தொகுத்து சரியான முறையில் எடிட் செய்திருக்கும் பத்ரிக்கையாளர் ப. திருமலை, & சிவக்குமார் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது.
5.இனியெல்லாம் பிஸினஸே
ஐபிசிஎன்னுக்காக வாரந்தோறும் ஒருவர் வீதம் போராடி வென்ற 52 பிசினஸ் புள்ளிகளை பேட்டி எடுத்து அவை தொகுக்கப்பட்டு இனியெல்லாம் பிஸினஸே என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகி உள்ளன.
இதில் கட்டுரைகளுக்கு எனது பங்களிப்பைச் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இந்த நல்வாய்ப்பை நல்கிய ஐபிசிஎன் 2017 குழுமத்துக்கும், அதன் கமிட்டி ஹெட் ஆத்தங்குடி திரு.எஸ் ராமநாதன் அவர்களுக்கும், கோஆர்டினேட்டர்கள் திருமதி தெய்வானை சேகர், திருமதி தேவி ரமேஷ் ஆகியோருக்கும், எடிடோரியல் டீமின் திரு காவிரி மைந்தன் மற்றும் திரு மெய்யப்பனுக்கும் ( எனது சகோதரன் ) ஐடி விங் திரு சுந்தரம். ஆச்சி வந்தாச்சு இதழின் ஆசிரியை திருமதி கமலா பழனியப்பன், திரு சுந்தரேசன், குழுத்தலைவர் திரு ஏ என் சொக்கலிங்கம், சோழபுரம் திரு ரமேஷ் ஆகியோருக்கும். மற்றும் அருமையான புத்தகமாக்கம் செய்து மற்றும் அநேக கட்டுரைகள் எழுதி இருக்கும் திரு எஸ் பி அண்ணாமலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இக்கட்டுரைகள் இணையத்தில் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன. ஒவ்வொரு பேட்டிக்கு முன்பும் தகுந்த விபரங்கள் கொடுத்து தயார்படுத்தி அந்தப் பேட்டி எப்படி எல்லாம் சிறப்பாக அமையவேண்டும் என்று சொல்லி வழி நடத்திய ராம் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். புத்தகமாகப் பார்க்கும்போது மிகவும் அழகாக உள்ளது. அதில் இன்சொல் கூறி அறிமுகப்படுத்தியமைக்கும் மிகுந்த நன்றிகள் சார் 

இந்த 52 பேரில் நான் பேட்டி எடுத்த ஐவரும் மிகப்பெரும் புகைப்படங்களில் இன்னும் பொலிவாகக் காட்சி அளிக்கின்றனர். அது அவர்களின் தன்னம்பிக்கையின் ஒளி. மென்மேலும் இவர்கள் ஒளிரவும் உயரவும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)