எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 ஜனவரி, 2016

துரத்தும் நதி.

நாற்புறமும் மலைகள் சூழ்ந்தும்
துரத்தும் ஏதோ ஒன்றிலிருந்து
தப்பிப்பதுபோல ஓடிக்கொண்டிருக்கிறது நதி.

கடலுள் கலப்பது தவிர
வேறேதும் வழியிருக்கவில்லை அதற்கு.

அலையாகவோ மழையாகவோ
தேடிப்பார்க்கின்றது எது துரத்தியதென.


சோர்வதே இல்லை அது
தன்னைத் தானே துரத்தும் விளையாட்டில்.


7 கருத்துகள்:

  1. அருமை
    நாமும்தான் நதியைத் துரத்துகிறோம்
    கடலை நோக்கி

    பதிலளிநீக்கு
  2. //சோர்வதே இல்லை அது
    தன்னைத் தானே துரத்தும் விளையாட்டில்.//

    உங்களைப்போலவே ...
    தாங்கள் சோர்வில்லாமல் ...
    அடிக்கடி பதிவுகள் கொடுப்பது போலவே! :)

    பதிலளிநீக்கு
  3. தன்னைத்தான் துரத்தும் விளையாட்டு
    நதிபோல மனிதனுக்கு வாய்ப்பதில்லோ?

    அருமை.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. சூப்பர்மா..பெண்ணும் தான் ஓடிக்கொண்டே.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி கோபால் சார் !!!!!!!!! :)

    மனிதனும்தான் ஊமைக்கனவுகள்

    நன்றி சக்தி ப்ரபா

    நன்றி கீதா :) உண்மைதான்பா


    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...