எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சார்பு நிலை..

சிரசு பலவானாலும்
அங்குசமற்ற மூளைகளோடு..

வெட்ட வெட்ட மகிஷாய்
கிளைக்கும் தலைகளோடு..

நாலாவதைக் கிள்ளி
எறிந்தாலும் எள்ளலோடு..


வடக்கில் தலைவைத்து
வெட்டி ஒட்டிய முகத்தோடு

கண்ணாடியைக் காணும்வரை
பூனையின் சாயலோடு..

உற்ற இன்ன பிற
அசட்டுத்தனங்களோடு..

விளம்புதல்கள் முடித்து
உருமாற்றங்களோடு..

சார்பற்றதும் தெறிக்கிறது.
சிறுத்தையின் உறுமல்களோடு..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப்ரவரி 20. 2011. திண்ணையில் வெளிவந்துள்ளது.

6 கருத்துகள்:

  1. சார்பு நிலை பற்றிய கவிதை சார்பு அற்றதாகவே உள்ளது.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. புரிந்தும் புரியாதது போல் இருக்கிறது கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் இந்த டியூப் லைட்டுக்கு

    பதிலளிநீக்கு
  3. //சார்பற்றதும் தெறிக்கிறது.
    சிறுத்தையின் உறுமல்களோடு..//

    சார்பற்று இருந்தால் உறுமலாம்.. இல்லைன்னா ம்யாவ்தான் நிறைய சிறுத்தைகளுக்கு :-))

    அசத்தல் கவிதை தேனக்கா..

    பதிலளிநீக்கு
  4. சிரசு பலவானாலும்
    அங்குசமற்ற மூளைகளோடு../

    சார்புநிலை பற்றி அருமையான கருத்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. நன்றி கோபால் சார்

    நன்றி ராஜா

    நன்றி நம்பிக்கைப் பாண்டியன்

    நன்றி சாந்தி

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...