எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 ஜனவரி, 2010

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம்

சொல் பேச்சு கேட்பதில்லை ..
அறிவுரை கேட்பது விட ஐ பாட் கேட்பது ஆனந்தம்.
தினமும் பைக்கை உறுமச்செய்கிறான் ...
என் கட்டயத்தின் பேரில் ஹெல்மேட்...
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூரூம்ம்ம்.................................................

****************************

ஜன்னல் இருக்கை அவனுக்கானதல்ல..
வளர்ந்த முட்செடிகள் அடிக்கக்கூடும்...
குளிர்ராவுகளில் சேணம் போல மங்கிக் குல்லாய்..
ரஜாய்க்குள்ளும் அவனை
அதிகக் கணப்பாய் அணைத்தபடி....
எந்த தேசம் சென்றாலும்
எல்லா உணவும் என் ருசி பார்ப்பிற்குப்பின்...

*******************************

பாலருந்தும் போது வழியும்வாயுடன் தூங்குபவனை
கன்னத்தில் சுண்டச் சொல்லும் அம்மா.....
வயிறு காயுமோவென்று
லேசாகத்தட்டுவேன் வலியுடன்....
ஊக்குகள் கண்களில்
பட்டுவிடுமோவென்ற பரிதவிப்பில்...
தாலிக் கொடி பற்றி விளையாடி...
முந்தானையில் முகம் மூடிச் சிரித்து.....

***********************************

வயிற்றுக்குள் கைவிரலோ
கால்விரலோ கிள்ளுவதுபோல்...
முண்டி விளையாடி வளர்ந்து வெளியாகி..
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூரூரூம்ம்ம்ம்மென்று..
செல்பவனின் பின்னால்
என் கடவுளுக்கான வேண்டுதலும் தொடர்ந்து ......

************************************

டிஸ்கி:- சும்மா இருந்த என்னை பக்தி உ(மானா)க
மாற்றிய அண்ணாமலையான் ., கலையரசன்.,
வினோத் கௌதம்முக்கு நன்றி.....

46 கருத்துகள்:

  1. செல்பவனின் பின்னால்
    என் கடவுளுக்கான வேண்டுதலும் good

    பதிலளிநீக்கு
  2. விர்ர்ர் ன்ன்னு..இருக்குங்க....:::))

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான வரிகள்.. நெகிழவைக்கும் பாசம்.. தாய்மை.

    //பாலருந்தும் போது வழியும்வாயுடன் தூங்குபவனை
    கன்னத்தில் சுண்டச் சொல்லும் அம்மா.....
    வயிறு காயுமோவென்று
    லேசாகத்தட்டுவேன் வலியுடன்....
    ஊக்குகள் கண்களில்
    பட்டுவிடுமோவென்ற பரிதவிப்பில்...
    தாலிக் கொடி பற்றி விளையாடி...
    முந்தானையில் முகம் மூடிச் சிரித்து.....//

    வாவ்! வாவ்! வாவ்!

    பதிலளிநீக்கு
  4. 99 ல் விகடன் பரிசு போட்டியில் வென்ற என் ”தாய்மை” குறித்த கவிதையை நினைவு படுதுகிறது தேனம்மை

    திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. எல்லா அம்மவக்கும் பையன் வண்டியை எடுத்தானா ஒரே உணர்வு தான்..
    கிளாஸ்..:)

    பதிலளிநீக்கு
  6. செல்பவனின் பின்னால்
    என் கடவுளுக்கான வேண்டுதலும் தொடர்ந்து ...... ........
    very sweet!

    பதிலளிநீக்கு
  7. ஒரு தாயின் உணர்வுகள் தெரிகிறது. நன்று.

    பதிலளிநீக்கு
  8. வயிற்றுக்குள் கைவிரலோ
    கால்விரலோ கிள்ளுவதுபோல்...
    முண்டி விளையாடி வளர்ந்து வெளியாகி..
    விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூரூரூம்ம்ம்ம்மென்று..
    செல்பவனின் பின்னால்
    என் கடவுளுக்கான வேண்டுதலும் தொடர்ந்து ......

    ஐயோ ஐயோ முடியலை
    அம்மாவை ஞாபக படுத்தீடீங்க

    நிறைய நிறைய எழுதுங்க இதே போல
    உணர்ச்சி சார்ந்து
    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  9. //டிஸ்கி:- சும்மா இருந்த என்னை பக்தி உ(மானா)க
    மாற்றிய அண்ணாமலையான் ., கலையரசன்.,
    வினோத் கௌதம்முக்கு நன்றி..... //

    சும்மா விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு இருந்தது தேனம்மை....

    யார் எவ்வளவு சொன்னாலும், “பக்தி” கட்டுக்குள்ளே இருக்கிறது... அதனாலே ஓகே...

    பதிலளிநீக்கு
  10. கவிதை நிஜமாவே விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம்னுதான் இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு சகோதரி.

    பதிலளிநீக்கு
  11. உங்க மனசை போலவே கவிதை...ரொம்ப நல்ல இருக்கு...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. உணர்ந்த கவிதை, உணர்த்தும் கவிதை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. வார்த்தைகள் விர்ர்ர்ர்ரூம்..

    பதிலளிநீக்கு
  14. மத்தவங்க போறப் போக்கைப் பாத்தாலே ஆண்டவான்னு அடிச்சுக்கிற மனசு, நம்ம வீட்டில உள்ளவங்கன்னா வீடு வந்து சேர்ற வரைக்கும் திக்திக்..தான்..

    பதிலளிநீக்கு
  15. கவிதை மிக நெகிழ்வு.

    தலைப்பு பக்கா!

    பதிலளிநீக்கு
  16. தேனு...தாயாய் தாரமாய் அன்பின் தெய்வமாய்
    நீங்கள்.பாசம் கொட்டிய கவிதை.

    பதிலளிநீக்கு
  17. நன்றி விக்னேஷ்வரி உங்க முதல் வருகைக்கு ..

    ட்ரெஸ்ஸிங் சென்ஸ் சுப்பர்ப் விக்னேஷ்வரி

    கலக்கு கலக்குனு கலக்கிட்டீங்க நல்ல உபயோகமுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  18. நன்றி ருத்ரன்

    உங்க பதிவில் இணையமும் நானும் என்பதில் சொன்ன முதல் வார்த்தையே அசரடித்துவிடுகிறதே ருத்ரன்

    பதிலளிநீக்கு
  19. நன்றி வானம்பாடி

    சினிமா விமர்சனம் எல்லாம் கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க

    பதிலளிநீக்கு
  20. நன்றி சங்கர்


    நல்ல பாலிசி பலா எனக்கும் எடுக்கப் போறேன்

    பதிலளிநீக்கு
  21. நன்றி வசந்த்

    அகந்தையில்லை என்ற அகந்தை ..கலக்குறே வசந்த் கவிதைகள்ல

    பதிலளிநீக்கு
  22. நன்றி பட்டியன்

    பட்டியன் புனிதன்னு கதையெல்லாம் சூப்பரா இருக்கு பட்டியன் நல்ல கட்டுக்கோப்பா இருக்கு கதை திரைக்கதை வசனம் ரெடி ஒரு தயாரிப்பாளரையும் டைரக்டரையும் பிடிங்க நல்ல சினிமா நிச்சயம்

    பதிலளிநீக்கு
  23. நன்றி நேசன்

    நேசன் உங்க மீள்பதிவு என்னோட கவிதையின் தொடர்ச்சியாக உணர்றேன்

    முன்பு செம்புராங்கல்லெல்லாம் கூட வீடு கட்ட செட்டி நாட்டுப் பக்கம் உபயோகப் படுத்தி இருக்காங்க

    பதிலளிநீக்கு
  24. நன்றி அஷோக்

    உங்க ..நான் இங்கே அவள் அங்கே.. கவிதைஅருமை

    பதிலளிநீக்கு
  25. நன்றி வினோத்
    உங்க கடந்துவந்த மனிதர்கள் அருமை

    பதிலளிநீக்கு
  26. நன்றி சித்து

    சித்ரா என்னோட ப்ளாக்கில இருக்குற மீனுக்கும் வாஸ்துவுக்கும் எந்த சம்பந்தமுமில்லைம்மா என்னோட பையன் ப்ளாக்கர்ல இருக்குற எல்லாத்தையும் கேட்ஜெட்டுல போட்டுக் குடுத்துட்டான் ஆத்தாடி இந்த சித்துவுக்கும் அம்முவுக்கும் பதில் சொல்ல முடியலப்பா

    பதிலளிநீக்கு
  27. நன்றி சைவக் கொத்துப் பரோட்டா

    பதிலளிநீக்கு
  28. நன்றி பாலா

    ஊடலின் தேவமொழி மௌனம் மிக அருமை ரசித்தேன் பாலா

    பதிலளிநீக்கு
  29. நன்றி நவாஸ்

    சீக்கிரம் நூராவைப் பார்க்கப் போறீங்க ..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. நன்றி கமலேஷ் ஒரு முதிர் கன்னியின் இரவு அருமை

    பதிலளிநீக்கு
  31. நன்றி விஜய் கல்வி கவிச்சை அருமை

    பதிலளிநீக்கு
  32. நன்றி ரிஷபன் மனப்பறவை பத்திரம்

    பதிலளிநீக்கு
  33. நன்றி அக்பர்

    தோற்றதுக்குக் கூட வாழ்த்துக்கள் அக்பர் வெற்றிக்குமட்டும் தான் சொல்லணுமா என்ன

    பதிலளிநீக்கு
  34. நன்றி முனியப்பன் சார்

    உங்க பத்துமாதம் வயித்துவலி பற்றிய இடுகை பயமா இருந்தது

    பதிலளிநீக்கு
  35. நன்றிஹுசைனம்மா கரெக்டா சொன்னீங்க


    மிக அருமையான பகிர்வு குழந்தைகளுக்கு புரியுற மாதிரி எல்லாத்தையும் சொல்லத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  36. நன்றி ஹேமா உங்கள் பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  37. நன்றி மக்கா

    பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருப்பது அருமை

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...