எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 மே, 2020

கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

1551.பெண்பார்த்தல் :- மாப்பிள்ளை பெண் இருவருக்கும் ( கோவில், வயது, கல்வி, அந்தஸ்து, தகுதி, அழகு , ஜாதகம் பார்த்து ஒத்துவந்தால் ) தோதான ஒரு இடத்தில் , கோவிலிலோ அல்லது உறவினர் வீட்டிலோ மாப்பிள்ளையும் பெண்ணையும் பார்த்துக்கொள்ள வைப்பார்கள்.


1552. திருமணம் பேசி முடித்துக் கொள்ளுதல்/கெட்டி பண்ணிக் கொள்ளுதல் - பெண்பார்த்து பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்தபின்பு இருவீட்டுப் பங்களாளிகளையும் கூட்டித் திருமணம் பேசி முடித்துக் கொள்வார்கள். இதை கெட்டி பண்ணிக் கொள்ளுதல் என்றும் சொல்வதுண்டு. ஜோசியரிடம் கேட்டு நாளை முடிவு செய்து அறிவிப்பதும் உண்டு.


1553. முறைச்சிட்டை எழுதிக் கொள்ளுதல் :- திருமண சமயத்திலும் ( மாப்பிள்ளை பெண் இருவருக்கும் )  அதன் பின் மூன்று வருடங்களுக்கு தீபாவளி, பொங்கல், பிள்ளையார்நோன்புச் சீர் கொடுப்பது பற்றி எழுதிக் கொள்வார்கள். இதிலேயே பெண் பார்த்ததுக்கு, பேசி முடித்துக்கொண்டதுக்கு, திருப்பூட்டியதற்கு, திருப்பூட்டிய முறைகள், பெண் அழைத்ததுக்கு, முதல் வீடு மறுவீட்டுக்கு, பிள்ளை  பிறந்ததும் கொடுப்பது என்பது வரை எழுதிக் கொள்வார்கள். இதில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாருக்குப் பவுன் கொடுப்பார்கள். ( தாலிக்குப் பொன் ) மேலும் தற்போது எல்லாம் முறைச்சிட்டை நோட்டில் எழுதுவது இல்லை. எல்லாம் பேப்பரில்தான். அதுவும் பணமாகவே. ஸ்ரீதனப் பணத்தையே மாமியாருக்கு மாப்பிள்ளைக்கு பெண்ணுக்கு என இத்தனை வராகன் எனப் பிரித்துக்கொடுப்பார்கள் முன்பு.இப்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டார் தரும் அனைத்தையுமே பெண்ணின் பெயரிலேயே டெபாசிட்டாகப் போட்டு விடுகிறார்கள். திருமணச் செலவுகள் இருவருக்கும் சமம்தான். பெண்ணுக்குத்தோதுபோல் நகை போடுவதும் வெள்ளிச் சாமான்கள் வைப்பதும் ( சொற்பமாக வைத்தாலும் ) பெண் வீட்டாருக்கு எக்ஸ்ட்ரா செலவு. மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்குக் கழுத்துருவுக்குப் பொன் தட்ட என்று மூன்று பவுனில் இருந்து 16 பவுனும் அதற்கு மேலும் கூடக் கொடுப்பார்கள். பெண்ணுக்குத் திருமணத்துக்கான உடைகள் மினிமம் ஐந்து பட்டுப் புடவைகள், மற்றபுடவைகள், சுடிதார், சல்வார், நைட்டி, உள்ளாடைகள் சோப்பு சீப்பு கண்ணாடி செருப்பு முதற்கொண்டு வைப்பார்கள். இதுவே ஒன்றரை லட்சம் வந்துவிடும். மூன்று பவுன் ஒரு லட்சம், அது போக ஒரு வெள்ளிச் சாமான் ஒரு கிலோ ( குடம் அல்லது கடகாம் ) அதுவும் 75,000 வந்துவிடும். (இப்போது மாப்பிள்ளை வீட்டில் கும்பிட்டுக் கட்டிக் கொள்ள வந்ததையும் கேட்பதில்லை. ஸ்ரீதனத்தையே தொடுவதில்லையாம் இதில் இந்தப் பணமெல்லாம் எதுக்கு. மகனும் மருமகளும் ஒத்துவாழ்ந்தாலே போதும் :)  )


1554. திருமண அழைப்பிதல் தயாரித்தல் :- தங்கள் குடும்ப வழக்கப்படி உள்ள தெய்வத் திருவுருவங்களை அமைத்து இன்ன நாள் இன்ன நேரம் இன்ன இடத்தில் நடக்கும் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துத் திருமண அழைப்பிதழைத் தயார் செய்ய வேண்டும். முன்பு தம் இல்லத்தில் நடத்தப்பட்ட ஒரு திருமண அழைப்பிதழை முன்மாதிரியாகக் கொண்டு தயாரித்தால் எளிதாக இருக்கும்.


1555. அழைப்பிதழ்களை அனுப்புதல் :- தாயாதி பங்காளிகளின் , நண்பர்களின் அட்ரஸை சேகரித்து செக் செய்து அதன் பின் வாட்ஸப், ஈமெயில், போஸ்ட் மூலம் திருமணத்துக்கு ஒரு மாதம் முதல் பதினைந்து நாட்கள் முன்பாகத் திருமண அழைப்பிதழ்களை உறவினர் நண்பர்களுக்கு அனுப்பிட வேண்டும்.


1556. முகூர்த்தக் கால் ஊன்றுதல் :- திருமணத்துக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் முன்பு( அதிகபட்சம் ஒருவாரம்) மாப்பிள்ளை பெண் இருவர் வீட்டிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் முகூர்த்தக் கால் ஊன்றுவார்கள். கொட்டகைக்காரர் வந்து வீட்டின் வளவில் ஈசான்ய மூலையில் வைத்து மூங்கிலில் மாவிலைகள், மஞ்சள் தோய்ந்த ஒரு துணியில் தேங்காயைக் குடுமியோடு கட்டுவார். அதில் உறவினர்கள் வந்து மஞ்சள் தடவிப் பொட்டு வைப்பார்கள். வளவு வாசலில் ஈசான்ய மூலையில் பால் ஊற்றி அந்தமூங்கிலை நிற்கவைத்துக் கட்டி அதற்குத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டுவார்கள். இதற்கு முகூர்த்தக் கால் ஊன்றுதல் எனப் பெயர். இதை ஊன்றிய பிறகு மாப்பிள்ளை பெண் இருவர் வீட்டிலிருந்தும் கேதம் தீட்டு ஆகியவற்றுக்குப் போகக் கூடாது. திருமணம் நல்லபடியாக முடிந்து கோவில் வேண்டுதல்களை நிறைவேற்றியபின்பு போகலாம்.


1557. கல்யாணம் சொல்லுதல் :- முகூர்த்தக் கால் ஊன்றும்போதே நடுவீட்டுக் கோலமிட்டு வைக்க வேண்டும். அன்றே கல்யாணம் சொல்லிவிடலாம். முதலில் மாப்பிள்ளை/பெண்ணுக்குத் தாய்தந்தையர் தங்கள் வீட்டில் மாப்பிள்ளை/பெண்ணின் அப்பத்தா & ஐயாவுக்குக் கல்யாணம் சொல்லணும். சாமி வீட்டில் விளக்கேற்றித் தடுக்குப் போட்டு ஐயா அப்பத்தாவை அமரவைத்து எதிரில் பெற்றோர் அமர்ந்து சில்வர் வாளியில் பழங்கள், மட்டைத் தேங்காய் பணம் வைத்து தங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் என்று சொல்லி அக்கல்யாணத்தை நல்லபடி நடத்திக் கொடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லி ஆசி பெறவேண்டும். சகோதரர்களை அங்கேயே அழைக்கலாம். அதன்பின் தங்கள் சகோதரி வீட்டிற்கும் சென்று  வாளி பணம் மட்டைத் தேங்காய் வைத்து அழைக்க வேண்டும். மாமியார் வீட்டுக்கும் சென்று மாமியார் மாமனாரையும் மச்சினர் கொழுந்தியாள்களையும் அழைக்க வேண்டும். இதுதான் கல்யாணம் சொல்லுதல். இதில் இன்விடேஷன்களையும் வைத்துச் சொல்லலாம். கல்யாணம் சொல்லுபவருக்கு வீட்டார் அனைவரும் பாக்குப் பணம் கொடுப்பார்கள்.


1558. உள்ளூரில் பேப்பர் வைத்தல். :- பங்காளிகள் வீட்டுக்கும் மற்ற நெருங்கிய உறவினருக்கும் உள்ளூரில் இருப்பவர்களுக்கும் பையன்/பெண்ணின் பெற்றோர் சென்று நேரில் பேப்பர் வைத்து அழைக்க வேண்டும்.சிலர் ஊரோடு அழைப்பார்கள் அனைத்து வீட்டுக்கும் செல்ல முடியாததால் ஊரில் இருக்கும் உறவினர் யாரிடமாவது கொடுத்து உள்ளூர்க்காரர்களுக்குப் பேப்பர் வைக்கச் சொல்லுவார்கள்.


1559. கோவிலில் பாக்கு வைத்தல். :- இருவீட்டாரும் அவரவர் சேர்ந்த கோவிலில் பேசி முடித்துக் கொண்ட பின்பு திருமணத் தேதியைக்குறித்துக் கொடுத்து கோவில் மாலைக்கும் மேளத்துக்கும் சொல்லி எழுதி வைக்க வேண்டும். திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்பு பங்காளிகளி ஒருவரிடம் இன்விடேஷனைக் கொடுத்துப் பணமும் கொடுத்துக் சுய விவரங்களைக் கொடுத்துக் கோவிலில் பாக்கு வைக்கச் சொல்ல வேண்டும். இதை வைத்துதான் அவர்கள் அந்தத் திருமணத்தை அங்கீகரித்து அந்த மணமக்களைக் கோவில் புள்ளியாக்குவார்கள்.


1560. வீட்டுப் படைப்பு :- வீட்டு முன்னோருக்குத் திருமணத்துக்கு முன்பு அநேகர் படைப்பார்கள். புதுத்துணி எடுத்துப் போழை துவைத்துக் கத்திரிக்காய் வாழைக்காய் அவித்துப் பாற்சோறு படைத்து பூ பழம் நகைகளால் அலங்கரித்து அழைத்து அவர்கள் ஆசியை வேண்டுவார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


















































129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும். 


130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

131.காரைக்குடி முனியையா கோயில்.

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

137. வட்டாரப் பழமொழிகள் - 4 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

147. பேர் பெற்ற வீடு.

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

150. பூசைச் சாப்பாடு.



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...