எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SAVE CHETTINAD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SAVE CHETTINAD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜூன், 2018

செட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.

மேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும்   கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவாயில்களையும் அரசர்கள் ஆளும் கோட்டைகளில் மட்டுமல்ல. நகரத்தார்கள் வாழும் நாட்டுக்கோட்டையிலும் காணலாம்.மியான்மரின் ஷ்வேனந்தா மடாலயத்தின் தேக்குமரச்சிற்பக் கலைபோன்ற தொகுப்புச் சிற்ப வேலைப்பாடுகளை ஒவ்வொரு இல்லத்தின் நிலைக்கதவிலும் நாம் கண்டு களிக்க முடியும்.   

செட்டிநாட்டு இல்லங்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் அமைந்திருந்தாலும்  இந்தோ இஸ்லாமிய வேலைப்பாடுகளாலும் அழகு பொலிபவை.   வீடுகளின் நுழைவாயில்களில் காப்பாய் கடவுளர்களின் சிலை வைக்கப்பட்டிருப்பதும் நிலைவாயில்களிலும் அவர்கள் சிற்பமாய் அரசோச்சுவதும் காட்சிக்கு விருந்தாகும். இப்படியாகப்பட்ட கோட்டைபோன்ற வீடுகளின் இன்றைய நிலை என்ன ?


தமிழ்நாட்டின் மேம்பட்ட நகர்ப்புறக் கட்டிடக்கலைக்கு சாட்சியமாய் எஞ்சி இருப்பது செட்டிநாட்டின் பாரம்பர்ய இல்லங்களே. மற்ற மாவட்டங்களில் உள்ள பாரம்பர்ய இல்லங்கள் பொருளாதாரக் காரணங்களால் நலிவுற்றும் நில விற்பனைக்கு இரையாகியும் வருகின்றன. சொல்லப்போனால் எழுபது ஆண்டுகளுக்கு முன், மியான்மர் மற்றும் மலேயாவின் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்டுவிக்கச் சென்ற செட்டிநாட்டினரும் சந்திக்க நேரிட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...