என் முகநூல் தோழி/தங்கை ருக்கு ஜெய். ஆசிரியையாகப் பணிபுரிகிறார். அவருடைய பதிவுகளை அவ்வப்போது படித்து ரசிப்பேன். மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். மாணவர்களுடனான நிகழ்வுகளை யதார்த்தமாக விவரித்திருப்பார். மனதைத் தொடும் எழுத்துக்கள். அவருடைய தேன்மொழி எனக்கு நெருக்கமானவள். :) அவரிடம் எனது வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித்தரக் கேட்டிருந்தேன்.
என் வலைப்பதிவுக்காக உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்டில் ஏதும் எழுதித்தாருங்கள் ருக்கு.
////தங்கள் அன்பழைப்பிற்கு நன்றி மேம்.
என் வலைப்பதிவுக்காக உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்டில் ஏதும் எழுதித்தாருங்கள் ருக்கு.
////தங்கள் அன்பழைப்பிற்கு நன்றி மேம்.
நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்க்கிறேன்.இதுவரை blog எதுவும் படித்ததில்லை..முதலில் உங்கள் வலைப் பக்கத்தைப் படித்துத் தொடங்குகிறேன்.
என்னைப் பற்றி...
என் பெயர் ருக்மணி .முகநூலில் Rukujey. உங்கள் பக்கத்துவீட்டுப் பெண்
போல் மிக மிக சாதாரணப் பெண்.
அன்பான கணவர் ,இரு ஆண் குழந்தைகள் கொண்ட ஆனந்தம் விளையாடும் வீடு என்னுடையது.
அரசுத் துவக்கப்பள்ளியில் ஆசிரியை பணி.26 ஆண்டுகள் முடிந்து 27 ஆம்
ஆண்டாக கல்விப்பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது மனநிறைவோடு.