எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
HALO MADURAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
HALO MADURAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 பிப்ரவரி, 2019

கவிக்குயிலும் தேசப்பிதாவும் ஹலோ மதுரை ஃபிப்ரவரி இதழில்.

கவிக்குயிலும் தேசப்பிதாவும்.

இந்தியாவின் நைட்டிங்கேல், பாரதீய கோகிலா என்றெல்லாம் புகழப்பட்டவர் யார் தெரியுமா. நம்ம கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள்தான். மிகுந்த தன்னம்பிக்கையும் தைரியமும் ஆளுமைத் தன்மையும் அழகும் இனிமையும் மன உறுதியும் வாய்ந்த மகத்தான சக்திமிக்க பெண்மணி அவர். நம் நாட்டு விடுதலையில் பெரும்பங்காற்றிய மாபெரும் பெண் சுதந்திரப் போராளி அவர். காந்தியடிகள் மேல் கொண்ட அபிமானத்தால் காங்கிரஸில் சேர்ந்து நாட்டு விடுதலைக்குத் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்தவர்.

வங்காள குலின் ப்ராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பிறந்தது ஹைதராபாத். சாதிக்கட்டுப்பாடு அதிகம் இருந்த அந்தக் காலத்திலேயே கோவிந்தராஜூலு நாயுடு என்ற மருத்துவரை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. 1879 பிப்ரவரி 13 இல் பிறந்த சரோஜினி நாயுடு எழுபது ஆண்டுகள் வாழ்ந்து இந்திய விடுதலைவேள்வியில் பங்கேற்றவர். காந்தியடிகள் மீது கொண்ட அபிமானத்தால் சுதந்திரப் போராட்டத்திலும் சத்யாக்ரகத்திலும் ஈடுபட்டவர்.. அதனால் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், விடுதலை இந்தியாவின் உத்திரப் ப்ரதே சகவர்னராகவும் ஆட்சி செய்தவர்.

தந்தை அகோர்நாத் புரட்சிச் சிந்தனையாளர். ஹைதராபாத்தில் நிஜாம் கல்லூரி என்ற ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது தாய் பரதசுந்தரி தேவியும் கவி இயற்றுவதில் வல்லவர்.சரோஜினியோடு கூடப்பிறந்தவர்கள் எண்மர். அவர்களில் ஒரு சகோதரரான வீரேந்திரநாத் புரட்சிக்காரர், இன்னொரு சகோதரரான ஹரீந்திரநாத் கவிஞர். எனவே சரோஜினியின் ரத்தத்தில் கவிதையும் புரட்சியும் ஊறித்ததும்பியதில் ஆச்சர்யம் இல்லை.
மெட்ராஸ் யூனிவர்சிட்டி, கிங் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ், லண்டன் கிரிடன் கல்லூரிகளில் பயின்றவர் சரோஜினி. உருது , தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.

செவ்வாய், 16 அக்டோபர், 2018

ஹலோ மதுரையில் கிட்டூர் ராணி சென்னம்மா.

மதுரையில் இருந்து வெளிவரும் இதழ் ஹலோ மதுரை. மதுரை சார்ந்த அனைத்துத் தகவல்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பிதழ் . மாதம் ஒருமுறை வருகிறது. நல்ல வழுவழுவென்ற தாள்களில் வண்ணப்பக்கங்களில் மதுரையின் அழகு விகசிக்கிறது. விலை 20 ரூபாய்தான். பிழையே இல்லாமல் படிக்க வெகு சரளம். அழகான லே அவுட்கள். கண்ணைக் கவரும் புகைப்படங்கள்.

இதில் அட்டைப்படங்களாக திருப்பரங்குன்றம், பதினெட்டாம்படிக் கருப்பர், காந்தி ம்யூசியம் என வியக்க வைக்கின்றன. நமது வலைப்பதிவ நண்பர் எஸ் பி  செந்தில்குமார் அவர்களின் பல்வேறு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

இப்பத்திரிக்கையை வெளியிட்டு  வருபவர் ரமேஷ்குமார் என்பவர். அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

அவர் முகநூலில் தொடர்பு கொண்டு கிட்டூர் வீராங்கனை ராணி சென்னம்மாவின் கட்டுரையை என் வலைப்பதிவில் இருந்து எடுத்து நூலில் கையாள அனுமதி கேட்டிருந்தார். மிகுந்த சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டேன்.  கட்டுரையுடன் பேர் போட்டு இதோ பத்ரிக்கையும் அனுப்பி விட்டார். நன்றி ரமேஷ். ஹலோ மதுரை இன்னும் பல சிறப்புகள் காண வாழ்த்துகள்.


நமது நாடு சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அப்போது சுதந்திரம் வேண்டி சாமான்யர்களும் புரட்சியாளர்களும் போராடியது போல சாம்ராஜ்யம் ஆண்டவர்களும் அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு அடிபணியாமல் போராடினர்.  அவர்களுள் சிலரின் வீர சரித்திரத்தைக் காண்போம்.

Related Posts Plugin for WordPress, Blogger...