வாஞ்சைமணம் பரப்பும் வாடா மலர்கள்
தேவானை, திருநிலை, ஒப்பிலாள், உண்ணா, ஒமையாமற்றும் செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் - தேனம்மைலெக்ஷ்மணன் சிறுகதைத்தொகுப்பு நூல்.
உலகம்
தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. பல லட்சம் வருடங்களுக்கு முன்பு உலகில்உயிர்
தோன்றி, பல்கிப் பெருகி ஓரறிவிலிருந்து ஆறறிவு உயிராக பரிணாமமடைய ஆரம்பித்தன. அதன்
தொடர்ச்சியாக, பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தொடரும் வாழ்க்கைப் பயணத்தின் நீட்சியில்,
ஆதி மனித வாழ்க்கை, கற்கால வாழ்க்கை எனத் தொடர்ந்து மனித நாகரீகம் உருவாகி வரும் பாதையில்,ஆயிரம்
வருடங்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கைவரையிலும் இன்னும் ஆய்வுகளும்
ஆராய்ச்சிகளும் உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கின்றன. செப்பேடுகளும், கல்வெட்டுகளும்,
பனையோலைகளும் இந்த உண்மைகளைக் கண்டறியும் ஆய்வில் துணை நிற்கின்றன. அச்சுத்துறை முழுமையான
பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அந்தந்த காலத்தில் எழுதப்பட்டவை எழுத்தின் மூல ஆதாரங்களாக
உள்ளன.
இதோ இன்றைய காலக்கட்டத்தில் நம் கண் முன்பாக கீழடியில்அகழ்வாராய்ச்சி நடப்பதைக் காண்கிறோம். பல உண்மைகளைக் கண்டடைந்து கொண்டிருக்கிறோம்.
