காரைக்குடியிலுள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி எனும் அரசுப் பள்ளியை
"" தனியார் பள்ளிகளைத் திரும்பிப் பாா்க்க வைக்கிறது"" என ஒரு இதழ் அண்மையில் பாராட்டியுள்ளது. எல்லா அரசுப் பள்ளிகளும் இப்படி இருந்தால், தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் பெருகியிருக்காதே!
வ.சுப.மாணிக்கனாரின் தாய்மொழிக் கல்விக் கொள்கை வெற்றி பெற்றிருக்குமே!
ஆகவே வ.சுப.மாணிக்கனாரின் நுாற்றாண்டு விழாவை அந்தப் பள்ளியில் கொண்டாட விழைகிறோம்.
08.12.2017 வெள்ளி (மாலை 5.30 மணி) ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
தமிழ் நெஞ்சினரே வருக! வருக!
அழகப்பருக்காகத் தவம் செய்த சொல்
நல்ல சொல் வேண்டுமென கவிஞர்கள் தான் தவிப்பார்கள், தவமிருப்பார்கள்.
ஒரு தமிழ்ச் சொல் தவமிருக்குமா? ஒரு நல்ல தமிழ்ச் சொல் தவமிருப்பதாக ஒரு கவிஞர் கற்பனை செய்கிறார். அந்த புரட்சிக் கவிஞர் வேறு யாருமல்ல நமது வ. சுப. மாணிக்கனார் தான்.
தவமிருப்பது எந்தச் சொல் தெரிமா?
வள்ளல் என்ற சொல் தவமிருக்கிறதாம், எதற்கா? அந்தச் சொல்லை ஏற்கத் தகுதியாவன் பிறக்க வேண்டுமாம். அந்த தவத்தின் பயனாகப் பிறந்தவர் தானாம் வள்ளல் அழகப்பர்.
ஆனால் வள்ளல் எனும் சொல் யாரை நினைந்து தவம் செய்கிறது என்பதை வ.சுப.மா. சொல்லவில்லை. நான் சொல்லாமல் இருக்க முடியாது. வள்ளல் எனும் சொல் வ. சுப. மாணிக்கனாரை நினைந்து தான் தவமிருந்தது.
அந்தக் கொடை இமயத்தின் புகழ் கொடியை ஏந்திய தமிழ் இமயமல்லவா வ.சுப.மா.? அதனால் தான் நலந்தா எடுக்கும் வ.சுப.மா. நூற்றாண்டு விழா காரைக்குடி கண்ட இரு இமயங்களையும் கொண்டாடும் இரட்டை விழாவாக பரிணமிக்கிறது.
தமிழ் நெஞ்சினீரே வருக வருக
இனி, வள்ளல் பால் வ.சுப.மா கொண்ட தீராக் காதலை சுட்டும் அந்த வெண்பா (கொடை விளக்கு நூலில் 31 ஆம் வெண்பாவாக இடம் பெற்றுள்ளது)
வள்ளற் றமிழ்சொல் வணங்கித்
தவஞ்செய்து //கொள்ளப் பிறந்த கொடையழகன் உள்ள //
தவஞ்செய்து //கொள்ளப் பிறந்த கொடையழகன் உள்ள //
உடைமை அனைத்தும் ஒழித்தான் ஒழியார்//
மடமை தொலைக்கும் மகன்//
நெஞ்சில் வாழும் ச.மெய்யப்பனார் !!