எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞானசம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞானசம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூலை, 2022

நமது செட்டிநாடு & தனவணிகன் இதழ்களில் எனது 15, 16, 17, 18, 19 வது நூல் வெளியீடுகள்.

 இந்த வருடப் புத்தகத் திருவிழாவில் எனது மூன்று நூல்களை ( வளையாபதி & குண்டலகேசி - மூலமும் உரையும், நாககுமாரகாவியம் - புதினம், நீலகேசி - புதினம் ) வெளியிட்டமைக்கு நன்றி பாரதி பதிப்பகம், அதன் நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா இராஜேந்திரன், திரு. ஞானசம்பந்தன் சார், வானதி பதிப்பகம் திரு. இராமு சார்.



திங்கள், 20 மார்ச், 2017

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - ஒரு பார்வை.

ராமனுக்கு நிகராகவும் ஒரு துளி அதிகமாகவும் கம்பனே மாந்தி மயங்கிப் புகழும் ஒரு பாத்திரமும் கம்பராமாயணத்தில் உண்டென்றால் அது இராவணன்தான்.  அ. ச. ஞான சம்பந்தனாரின் இராவணனின் மாட்சியும் வீழ்ச்சியும் படித்தேன். சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும்  “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.

Related Posts Plugin for WordPress, Blogger...