ஓநாய் குலச்சின்னம் - ஒரு பார்வை .
முப்பதாண்டுகள் காலம்
ஜியாங் ரோங்கின் சிந்தனையில் கருவுற்றிருந்திருக்கிறது இக்கதை. பன்னெடுங்காலமாக
உருக்கிய மனத் தீயை இப்புத்தகத்தில் இறக்கிவைத்து ஆசுவாசம் அடைந்திருக்கிறார்.
இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் ஆட்பட்டுத் தம்மைத் தவிர வேறு
எதையுமே பிரதானமாகக் கருதியிராதவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டியது இந்நூல். சீனப்
பின்னணியில் இக்கதை திரு. சி. மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் நாம் அருகே காணும்
மேய்ச்சல் நிலக் கதைபோல் சரளமாக இருக்கிறது.
