ரெட் சாண்ட் ஸ்டோன் எனப்படும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டது குவாலியர் கோட்டை. ஜெயின் ராக் கட் கல்சர் எனப்படும் வர்ணக் கற்களை வெட்டி ஒட்டி அழகு படுத்தப்பட்ட கோட்டை இது.
மன் மந்திர் என்னும் மகாலை ராஜா தோமர் மான்சிங் பதினாலாம் நூற்றாண்டில் கட்டினார். அந்த மன் மந்திரை ஒட்டிய இப்பகுதி பின்னாட்களில் ராஜரீகக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்திருக்கிறது. மேலே மூன்று உப்பரிகைகள். ராஜா, மந்திரி, தளபதிக்கான இடமோ அல்லது ராஜா ராணி இளவரசருக்கான இடமோ தெரியவில்லை.