ராதையாய் நான் க்ரீடை செய்ய
ஊன்மொத்தம் நீ என் உயிர்ச்சந்தமும்
நீ
தீஞ்சுவைக் கண்ணன் நீ தேன் வசந்தமும்
நீ
வள்ளியாய் நான் ஆட அந்தத்
தேனூத்தும் நீ தினைப்புனமும் நீ
வேல் முருகன் நீ வினைப்பயனும் நீ.
சீதையாய் நான் சேர அந்த
மான் கனவும் நீ மையல் நினைவும் நீ.
திரு ராமன் நீ தீ கர்ப்பமும் நீ
ஹெராவாய் நான் மிதக்க அந்த
ஒன்பதாம் மேகம் நீ ஒளி மைந்தனும் நீ
இளவரசும் நீ இடி முழக்கமும் நீ.