கவலை இல்லாத மனிதன் சந்திரபாபு
”பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே.. தங்கச்சிலை போல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே.. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் நெஞ்சம் பொங்குது தன்னாலே.. கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே.. தனியா தவிக்கிற வயசு.. இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு..தடுக்காதே என்னைத் தடுக்காதே.”. என்றெல்லாம் கூடக் காதலில் உருகிப் பாடியவர் சந்திரபாபு என்று பார்க்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் பொருத்தமாகவும் இருந்தது.
ஏனெனில் சந்திரபாபுவின் சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்கள்தான் அநேகம் ஹிட் ஆகி இருக்கின்றன. குமார ராஜாவில் “ பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய்.. ” என மந்தை மனிதர்களை எள்ளியவர். ஏவி எம்மின் சகோதரி என்ற படம் ஹிட்டாகக் காரணமே ”நான் ஒரு முட்டாளுங்க.. ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க” என்ற பாடல்தானாம்!
