பெண் ஏன் அடிமையானாள்
? ஒரு பார்வை.
பெண் ஏன் அடிமையானாள் ?
ஈ வெ ராமசாமிப் பெரியார் அவர்கள் 1942 இல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 76 வருடங்கள் கழித்து இன்றும் இக்கட்டுரைகள் சொல்லும் கருத்துக்கள் வெகு ஜனத்திற்கு அதிர்ச்சி அளிப்பனவாகவும் கைக்கொள்ள இயலாததாகவுமே இருக்கும்போது 1942 இல் இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு அதிகமாகத்தான் இருந்திருக்கும்.
கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை, பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழியவேண்டும். ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் படைத்துள்ளார்.
