எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
PALAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PALAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 நவம்பர், 2017

பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் எங்கள் வில்லுப்பாட்டு.

கல்லூரிகளுக்கிடையேயான கல்சுரல் காம்பெடிஷன்களில் ( INTERCOLLEGIATE CURTURAL COMPETITIONS )  பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் மொத்தமாக 5 போட்டிகளில் பங்குபெற மாணவியர் சென்றோம். நான் தமிழ் வெர்ஸ் ரைட்டிங் ( VERSE WRITING.) -  ஆன் த ஸ்பாட் கவிதை எழுதும்  போட்டியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்.  இன்னும் சில தோழியரும் ப்ளாக்போர்ட் ட்ராயிங், கார்ட்டூன் ட்ராயிங் , கட்டுரைப் போட்டி போன்றவற்றிற்கு வந்திருந்தார்கள். சென்றவர்களே ஸ்கிட் போன்ற ப்ரோக்ராமிலும் பங்கேற்றோம். அதில் ஒன்று இந்த வில்லுப் பாட்டு. இதில் நாங்கள் எல்லாம் பக்கத்துணையாக அமர்ந்து கதை சொல்பவர் சொல்லிவிட்டு வில்லைத் தட்டும்போது  சீடர்களாகக்  கோரஸாகப் பாடினோம்.

ஆண்கள் மாதிரி தலையைச் சுற்றி மடித்து கிராப் போல அமைந்து வெள்ளை சட்டை வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்து அந்த ஆண்கள் கல்லூரியில் ( ஹோ ஹோ என்று ஒரே சத்தம் ) திகிலோடு பாடியது மறக்க முடியாத அனுபவம்.  இதில் என் தோழி கே ஆர் கே கீதாவும் பங்கேற்றதாக ஞாபகம்.

ரயில்வே ஸ்டேஷனில் மதுரையில் இருந்து பாளைசெல்லும் வரையிலும் திரும்பி வரும்போதும் அந்த வில்லையும் குடத்தையும் வைத்துக் கொண்டு இடம் இடமாக அலைந்தோம். அந்த வில் வேறு லேசாகப் பட்டாலே ஜல் ஜல் என்றது வித்யாசமான அனுபவம். :)

எங்களுடன் வந்த மிஸ் நாங்கள் நன்றாகப் பாடினால் நெல்லையின் தொண்டையடைச்சான் உருண்டை/நெஞ்சடைச்சான் பக்கோடா வாங்கித்தருவதாக ப்ராமிஸ் செய்தார். ஹாஹா பின்னர் ட்ரெயின் ஏறும்போது இருட்டுக் கடை அல்வா வாங்கிக் கொடுத்தார். வாழையிலையில் சுருள் போல சூடாக இருந்தது அல்வா. அட்டகாசம்.

இனி நிகழ்ச்சியில் பாடிய பாடல்களைப் பார்ப்போம். ( யதேச்சையாக இது பழைய காலேஜ் பேப்பர்களுடன் அகப்பட்டது. :) இல்லாட்டி நீங்க மாட்டிக்கிட்டீங்க. என்ன சொல்றது ஹாஹா :)

(( வில்லுப்பாட்டு ஆறுமுகம்,  அவரது குழுவினர் & மகள் எங்களை மன்னிப்பார்களாக !  ))

கணபதி துதி. ( கோரஸ் )

கணபதியே அருள்வாய் துணை எமக்கு
கணபதியே அருள்வாய்
கதாகாலட்சேபம் செய்ய வந்துள்ளோம் நாங்கள்
கேட்பவர் அனைவரும் ஓடிவிடாமலே.
கணபதியே அருள்வாய்.

கீதா  சீ - 1 :- ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே
Related Posts Plugin for WordPress, Blogger...