சென்ற சில நாட்களாக அதிகம் விவாதிக்கபடும் வார்த்தை - மீ டூ.
இந்த மீ டூ பற்றி - சில பிரபலங்கள் சொன்னால் அது டிவி டிபேட்டுக்கு உரிய விஷயம். அதில் இருக்கும் உண்மையை அவரவர்க்குத் தக்கபடி எடுத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. இதில் ரேஸ், ஏஜ், க்ளாஸ் எதுவும் கிடையாது.
சாதாரணர்களுக்கு இல்லையா மீ டூ ப்ராப்ளம். ஏதேனும் ஒரு பருவத்தில் இதைக் கடந்தே இன்றிருக்கும் அனைவரும் வந்திருப்பார்கள். இதில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தோர் பற்றி செய்தி அதிகம் வருகிறது. அதுவும் ஆண் குழந்தைகளை அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களே சீண்டி இருக்கிறார்கள் என்பது அதிர வைத்த விஷயம்.
முகநூலில் பகிரப்படும் பல மீ டூக்கள் வேண்டாத முன்னாள் நண்பரைத் தாக்க ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுகிறது. “டீச்சர் இவன் என் சடையை பிடிச்சு இழுத்துட்டான் “ என்பதாகவே பல மீ டூக்கள் இருக்கின்றன.
உண்மையான மீடூவை சிலரே பகிர்ந்திருக்கிறார்கள். அது மிகப்பெரும் அதிர்ச்சியும் கண்ணீரும் அளித்த சம்பவம். இந்த மாதிரி மீ டூக்களில் அவர்கள் பண பேரத்துக்கு உட்பட்டு இழந்த பல லட்சங்கள் மட்டுமல்ல அடைந்த மனச்சோர்வும் மனச்சிதைவும் பதைக்க வைத்தது. மீண்டு எழுந்தவர்களைப் பார்க்கும்போது பிரமிப்பும் இன்னும் அவர்களுக்கு மனவலிமை பெருகவேண்டும் எனவும் வேண்டத் தோன்றியது.
இந்த மீ டூ பற்றி - சில பிரபலங்கள் சொன்னால் அது டிவி டிபேட்டுக்கு உரிய விஷயம். அதில் இருக்கும் உண்மையை அவரவர்க்குத் தக்கபடி எடுத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. இதில் ரேஸ், ஏஜ், க்ளாஸ் எதுவும் கிடையாது.
சாதாரணர்களுக்கு இல்லையா மீ டூ ப்ராப்ளம். ஏதேனும் ஒரு பருவத்தில் இதைக் கடந்தே இன்றிருக்கும் அனைவரும் வந்திருப்பார்கள். இதில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தோர் பற்றி செய்தி அதிகம் வருகிறது. அதுவும் ஆண் குழந்தைகளை அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களே சீண்டி இருக்கிறார்கள் என்பது அதிர வைத்த விஷயம்.
முகநூலில் பகிரப்படும் பல மீ டூக்கள் வேண்டாத முன்னாள் நண்பரைத் தாக்க ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுகிறது. “டீச்சர் இவன் என் சடையை பிடிச்சு இழுத்துட்டான் “ என்பதாகவே பல மீ டூக்கள் இருக்கின்றன.
உண்மையான மீடூவை சிலரே பகிர்ந்திருக்கிறார்கள். அது மிகப்பெரும் அதிர்ச்சியும் கண்ணீரும் அளித்த சம்பவம். இந்த மாதிரி மீ டூக்களில் அவர்கள் பண பேரத்துக்கு உட்பட்டு இழந்த பல லட்சங்கள் மட்டுமல்ல அடைந்த மனச்சோர்வும் மனச்சிதைவும் பதைக்க வைத்தது. மீண்டு எழுந்தவர்களைப் பார்க்கும்போது பிரமிப்பும் இன்னும் அவர்களுக்கு மனவலிமை பெருகவேண்டும் எனவும் வேண்டத் தோன்றியது.