2012 இல் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்ட 24 நூல்களில் எனது நூலும் நிம்மி சிவாவின் நூலும் இடம்பெற்றிருந்தன. அவரது ” என் வானிலே “ என்ற கவிதை நூல் பற்றி நான் எனது வலைத்தளத்திலும் விமர்சனம் எழுதி உள்ளேன். மிக மென்மையான மனதுக்கும் உணர்வுக்கும் சொந்தக்காரர் , அழகிய கவி உள்ளம் படைத்தவர் நிம்மி சிவா.
பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் சங்கம் 2016 ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் சிறுகதைப் போட்டியில் என்னுடைய சூலம் என்ற கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியின் முடிவை ஜெர்மனியில் இருந்து எனக்கு உடனடியாக முகநூலில் இன்பாக்ஸில் அறிவித்தவர் என் அன்புத்தோழி திருமதி நிம்மி சிவா. அக்கணம் முதல் அவரோடு மிக நெருக்கமாகி விட்டேன். நிம்மிசிவாவின் வானில் நானும் உலாப் போய் வந்தேன். அவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.
பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் சங்கம் 2016 ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் சிறுகதைப் போட்டியில் என்னுடைய சூலம் என்ற கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியின் முடிவை ஜெர்மனியில் இருந்து எனக்கு உடனடியாக முகநூலில் இன்பாக்ஸில் அறிவித்தவர் என் அன்புத்தோழி திருமதி நிம்மி சிவா. அக்கணம் முதல் அவரோடு மிக நெருக்கமாகி விட்டேன். நிம்மிசிவாவின் வானில் நானும் உலாப் போய் வந்தேன். அவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.

