எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
230 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
230 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

தேன் பாடல்கள்.பாசமும் பிரிவும் ( ரொமான்ஸ் வெள்ளி :)

221. மானூத்து மந்தையிலே மான்குட்டி பெற்ற மயிலே.
கிழக்குச் சீமையிலே அண்ணன் விஜயகுமார் தங்கை ராதிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு சீர் கொண்டு வரும் பாடல் காட்சி. ஒவ்வொரு வரியும் வைரம். ( பாடல் வைரமுத்து )

222. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
பாசமலரில் சிவாஜியும் சாவித்ரியும் அண்ணன் தங்கை. தனக்குக் குழந்தை பிறந்ததும் மாமன் சீர் கொண்டு வருவார் என்று பாடுவார். தனக்கும் அண்ணனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை ஒவ்வொரு வரியும் உணர்த்தும்.

223. பெண்ணே அழகிய தீயே
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பெரும்பாலான பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் இது ஏ க்ளாஸ் பாட்டு. மின்னலேயில் மாதவனும் ரீமாசென்னும்கூட செம க்யூட்.

224. வெண்மதி வெண்மதியே நில்லு.
இதுவும் மின்னலேதான். பிரிவைப் பாடும் பாடல்.  பாத்ருமில் உக்கார்ந்து அழும் காட்சியில் ரீமா செமயாக நடித்திருப்பார். மாதவனும் சோகத்தைப் பிழிந்திருப்பார். // அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே. அளந்து பார்க்க பல வழி இல்லையே// என்ற வரிகள் பிடிக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...