என் அன்பிற்கினிய தோழி ஜெயந்திரமணி மிக அருமையாக எழுதுவார். சிறுகதைகள் சொல்லும் விதம் தெளிவாகவும் அதன் மையக்கருத்து நச்சென்றும் இருக்கும். பொதுவாக நான் படித்த வரையில் குழந்தைகளின் நலனை மையப்படுத்தி இவர் எழுதிய ஆழ்துளைக்குழாய் சிறுகதை ஒன்றும் இக்கதையும் இவர் தொடர்ந்து குழந்தைகள் பற்றிய ( பெற்றோர்களுக்கான ) விழிப்புணர்வுச் சிறுகதைகள் படைக்கவேண்டும் என்ற என் எண்ணத்தை அதிகமாக்குகிறது. அதையே அவரிடம் கோரிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் :)
தொடர்ந்து எழுதுங்கள் ஜெயந்தி. உங்கள் வாசகியாக நானும் தொடர்கிறேன். :)
சாட்டர்டே போஸ்டுக்காக இவரிடம் கேட்ட போது இச்சிறுகதையை அனுப்பி இருந்தார். பள்ளி அட்மிஷனில்தான் எத்தனை வகைக் கதை படைக்கலாம். இது இன்னொரு கோணம். படித்து ரசிங்க. யோசிங்க. :)
/////“நான் என்றால் அது அவரும் நானும்,
அவரென்றால் அது நானும் அவரும்”
சுய விவரம்
நான் தாங்க ஜெயந்தி ரமணி. பிறந்தது முதல் இன்று வரை (62
ஆண்டுகளாக) சிங்காரச் சென்னை வாசி. உங்களுக்கு ஒரு ரகசியம்
சொல்லட்டுமா? முழுநேர அக்மார்க் சென்னைவாசியாக இருந்தும் நான்
தண்ணீருக்கு கஷ்டப்பட்டதே இல்லை. இருங்க இருங்க சென்னையில
தான் தெருவுக்கு நாலு கடை இருக்கே எப்படி கஷ்டம் வரும்ன்னு நீங்க
யோசிக்கறது புரியறது. ஆனா நான் சொன்ன தண்ணீர் H2O. இப்ப
புரிஞ்சுதா.