இவர்கள் எங்கள் பெரியப்பா வெ. தெ. மாணிக்கனார் அவர்கள். இவர்கள் 1276*ஆவுடையான் செட்டியார் வீட்டைச் சேர்ந்தவர்கள். மாபெரும் தமிழறிஞர். பச்சையப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவரது மாமனார் 1277* சேந்தனியார் வீட்டு ராமசாமி செட்டியார் அவர்கள். 1278* செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுடன் இருவரும் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம்.
சேந்தனியார் வீட்டு ராமசாமி அண்ணன் அவர்களின் மகன்தான் ( பெரிய கருப்பன் அவர்கள் ) காரைக்குடியில் தமிழ்க் கல்லூரியை நிறுவியவர். இன்றும் அது மாத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.
வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகள் வள்ளியாச்சியின் வீட்டில் நான்காம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு நடைபெற்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மேங்கோப்பும் ஷாண்ட்லியர்களும் மிக அழகு.
சேந்தனியார் வீட்டு ராமசாமி அண்ணன் அவர்களின் மகன்தான் ( பெரிய கருப்பன் அவர்கள் ) காரைக்குடியில் தமிழ்க் கல்லூரியை நிறுவியவர். இன்றும் அது மாத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.
வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகள் வள்ளியாச்சியின் வீட்டில் நான்காம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு நடைபெற்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மேங்கோப்பும் ஷாண்ட்லியர்களும் மிக அழகு.