எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சனிக்கிழமைப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனிக்கிழமைப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 டிசம்பர், 2014

சனிக்கிழமைப் பதிவு. முரளிகிருட்டிணன் சின்னதுரையின் அகரமுதல எழுத்தெல்லாம்..


முரளிகிருட்டிணன் சின்னதுரை. முகநூல் நண்பர், சகோதரர், வயசுப்படிப் பார்த்தால் என் பிள்ளைகள் வயசுன்னும் சொல்லலாம்.


இளங்கலை கணினியல் துறையில் பொறியியல் பட்டம் பயின்றவர். ஊடகவியலாளர்.

தமிழ் மொழி மீது பற்று உள்ளவர்.. சமூக செயற்பாட்டாளர். புதிய யுகம் தொலைக்காட்சி வழங்கும் பல நிகழ்ச்சிகளில் ( டாக் இட் ஈஸி, மனம் திரும்புதே, கிச்சன் காபினெட், ) இவரின் பணி இருக்கிறது. இளையோர் குரல் என்னும் இலக்கியப் பத்ரிக்கை நடத்தி வருகிறார். இவர் கல்லூரியில் படித்த காலத்தில்   மானூர் புகழேந்தி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் என்ற பட்டம் வழங்கினார்.

சாட்டர்டே ஜாலிகார்னர், சாட்டர்டே பதிவு என்று இரு போஸ்ட்களை என் வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்று ஒரு முறை முகநூலில் போட்டதும் உடனே வந்து ( அது பேராசிரியர் குணா அவர்களின் தமிழ்மொழி பற்றிய பதிவு ) ஏன் சனிக்கிழமைப் பதிவு என்று போடலாமே. ஏன் ஆங்கிலத்தில் போடணும் என்று உள்டப்பியில் வந்து குரல் கொடுத்தவர். அவ்வளவு மொழிப்பற்று.

/// திருக்குறளும், திருவள்ளுவரும் அரசியல் பாடு பொருள் ஆகியது.///

///உலகில் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது திருக்குறள்....
இது பாசக ஆட்சிக்கு வரும் முன்பே நடந்தது என்று அறிந்துக் கொள்வோமாக
ஆங்கிலத்தில் couplets என்று சொல்வார்கள்///

///திருவள்ளுவரும், திருக்குறளும் வாஜ்பாய் காலத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள் போலும் ....///

என்றெல்லாம் அவரின் முகநூல் சுவற்றில் நிலைத்தகவல்களைப் பார்த்ததும் உடனே  ஒரு கேள்வி கேட்டேன் . ஆனால் அரசியல் காரசாரம் எதுவும் வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க. , நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இதோ. 

///திருக்குறளும் திருவள்ளுவரும்..  ////

சனி, 26 ஜூலை, 2014

சனிக்கிழமைப் பதிவு. தமிழின் எதிர்காலம் பற்றி பேராசிரியர் குணா தமிழ்.



ஈரோட்டில் வசித்துவரும் காரைக்குடிக் கல்லலைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் குணா அவர்களின் வலைத்தளம் ”வேர்களைத் தேடி. ” இந்த வலைத்தளத்தைப் பலமுறை படித்திருக்கின்றேன். சமீபகாலமாகத்தான் அடிக்கடி படிக்க இயலவில்லை.

பேராசிரிய வலைத்தளங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சுசீலாம்மா, கல்பனா சேக்கிழார் , குணா ஆகியோரின் வலைத்தளங்கள் மாணவர்க்கு மட்டுமல்ல. தமிழ் மொழியின் பால் ஈடுபாடு கொண்ட அனைவருமே கற்றுக்கொள்ள உதவுபவை. இவற்றைப் படிக்கும் கணம்தொறும் மாணவியாக உணர்வதுண்டு.

திருச்செங்கோடு கே எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் குணசீலன் அவர்கள். இவருடைய இடுகைகள் அனைத்தும் தமிழ் மொழியின் இலக்கிய நயம், இலக்கணம் ஆகியவற்றையும் சொல் நயம் , பொருள் நயம் ஆகியவற்றையும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் தரப்பட்டவை. 

பேராசிரியர் நன்னனின் பணி போலவே இவரின் பணியும் சிறப்புக்குரியது. முகநூலில் பெரும்பாலும் வெளிநாடு/ வெளிமாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழ் பேசத்தெரியாத தமிழ்நாட்டு நண்பர்களே நன்னனின் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்து கொண்டதாகத் தெரிவிப்பார்கள்.

அந்த முறையில் இன்றைய தமிழ் இளைய தலைமுறைக்கு தமிழின் அரிச்சுவடி பற்றி அறிந்து கொள்ளவும். ஒரு சிறப்பான பொருள் அகராதியாகவும் இவரின் வலைத்தளம் திகழ்கிறது என்றால் மிகையில்லை. 

இவரிடம் நம் வலைத்தளம் சும்மாவின் சனிக்கிழமைப் பதிவுக்காக தமிழ் பற்றி சில வினாக்கள் ஆதங்கத்துடன். 

 நான் சில கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினராகப் பேசச் சென்றிருக்கிறேன். 

 ////// கலைக்கல்லூரிகளில் கூடத் தமிழ் மொழிப்பாடமாக இப்போது இல்லையே. இதனால் இலக்கியம் படிப்பவர்கள் இனிக் குறைந்துவிடுவார்களா. மனிதர் வாழ்வில் இலக்கியம் இனி தேவையே இல்லையா. கல்லூரிகளின் இந்த நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன ?. இதன் பொருட்டு என்னென்ன செய்யலாம் ?. /// 

Related Posts Plugin for WordPress, Blogger...