எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அகரமுதல எழுத்தெல்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகரமுதல எழுத்தெல்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 டிசம்பர், 2014

சனிக்கிழமைப் பதிவு. முரளிகிருட்டிணன் சின்னதுரையின் அகரமுதல எழுத்தெல்லாம்..


முரளிகிருட்டிணன் சின்னதுரை. முகநூல் நண்பர், சகோதரர், வயசுப்படிப் பார்த்தால் என் பிள்ளைகள் வயசுன்னும் சொல்லலாம்.


இளங்கலை கணினியல் துறையில் பொறியியல் பட்டம் பயின்றவர். ஊடகவியலாளர்.

தமிழ் மொழி மீது பற்று உள்ளவர்.. சமூக செயற்பாட்டாளர். புதிய யுகம் தொலைக்காட்சி வழங்கும் பல நிகழ்ச்சிகளில் ( டாக் இட் ஈஸி, மனம் திரும்புதே, கிச்சன் காபினெட், ) இவரின் பணி இருக்கிறது. இளையோர் குரல் என்னும் இலக்கியப் பத்ரிக்கை நடத்தி வருகிறார். இவர் கல்லூரியில் படித்த காலத்தில்   மானூர் புகழேந்தி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் என்ற பட்டம் வழங்கினார்.

சாட்டர்டே ஜாலிகார்னர், சாட்டர்டே பதிவு என்று இரு போஸ்ட்களை என் வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்று ஒரு முறை முகநூலில் போட்டதும் உடனே வந்து ( அது பேராசிரியர் குணா அவர்களின் தமிழ்மொழி பற்றிய பதிவு ) ஏன் சனிக்கிழமைப் பதிவு என்று போடலாமே. ஏன் ஆங்கிலத்தில் போடணும் என்று உள்டப்பியில் வந்து குரல் கொடுத்தவர். அவ்வளவு மொழிப்பற்று.

/// திருக்குறளும், திருவள்ளுவரும் அரசியல் பாடு பொருள் ஆகியது.///

///உலகில் பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது திருக்குறள்....
இது பாசக ஆட்சிக்கு வரும் முன்பே நடந்தது என்று அறிந்துக் கொள்வோமாக
ஆங்கிலத்தில் couplets என்று சொல்வார்கள்///

///திருவள்ளுவரும், திருக்குறளும் வாஜ்பாய் காலத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள் போலும் ....///

என்றெல்லாம் அவரின் முகநூல் சுவற்றில் நிலைத்தகவல்களைப் பார்த்ததும் உடனே  ஒரு கேள்வி கேட்டேன் . ஆனால் அரசியல் காரசாரம் எதுவும் வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க. , நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இதோ. 

///திருக்குறளும் திருவள்ளுவரும்..  ////

Related Posts Plugin for WordPress, Blogger...