எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கவிதை இதழ்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை இதழ்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 மே, 2017

பூபாளமும் செந்தாமரையும்.

பூபாளமும் செந்தாமரையும்.

எண்பத்தியாறுகளில் வந்த சில இலக்கியச் சிற்றிதழ்கள் வைகறை, சிப்பி, புதியபார்வை, நம்வாழ்வு ஆகியன.

நாங்கள் கல்லூரியில் ஐந்து பேர் ( மீனாட்சி, கே ஆர் கே கீதா, சுபத்ரா, நான், )சேர்ந்து புரவி ( பெகாஸஸ் ) என்ற சைக்ளோஸ்டைல் இதழ் ஒன்றை வெளியிட்டோம். காலாண்டிதழ் என்று நினைவு, இதில் மீனாட்சியின் எழுத்து ஷார்ப்பாக இருக்கும். ஆனால் அவள் தற்போது எழுதுவதில்லை. .

சில நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாகவும் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று பூபாளம். கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாமா மனோகரன் என்பவரால் வெளியிடப்பட்ட பூபாளத்தில் நானும் ஓரிரு கவிதைகள் எழுதி உள்ளேன்.

85’ஃபிப்ரவரி கல்கியில் வெளியான கிராமத்துத் திருவிழா என்ற கவிதையை ஏப்ரல் மாதம் ( விலைக்குப் போட எடுக்கும்போது :) ) படித்து விட்டு  எனக்குக் கடிதம் எழுதி வாழ்த்துத் தெரிவித்து தனது பூபாளம் இதழுக்கு படைப்புகள் அனுப்புமாறு கூறியிருந்தார் திரு மனோகரன்.

பூபாளத்துக்குப் படைப்புகள் கேட்டு எழுதப்பட்ட கடிதம்தான் இது.
Related Posts Plugin for WordPress, Blogger...