இவர்கள் – ஒரு
பார்வை.
இவர்கள்
புஷ்பா தங்கத்துரை என்ற பெயரிலும் ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரிலும் இவரது கதைகளைப் படித்திருக்கிறேன். இரண்டிலும் துல்லியமான மாற்றங்கள் இருக்கும். இதில் மனதைத் தொடும் ஆழமான வகை.
இந்நாவலில் இன்றைக்குக்கூட நாம் பேச அஞ்சும் பெண்களின் காமம் பற்றிய யதார்த்தமான எண்ணங்களைப் பேசி இருக்கிறார். இந்நூல் வெளிவந்த காலம் 1984. ஆனால் இன்றைக்கும் சர்ச்சைக்கு உள்ளாக்கக் கூடிய கதை அமைப்பு இது.
