எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2010

இருவருக்கும்

பனைமரங்களும் தென்னைமரங்களும்
பாய்மரங்களும் தெளித்துக் கிடக்க..
கரையோரம் ஆளைத்தழுவி
இழுத்துச்செல்லும் மின்சார அலை...
சொற்களின் அர்த்தமும்
வார்த்தைகளின் வீர்யமும்
கடந்த மௌனம்...
சும்மா பக்கத்தில் அமர்ந்து
இருப்பது கூட சுகமானதாய்...

நட்புக்கும் காதலுக்கும்
மேலானதொரு கரையாத உணர்வு...
வயதெல்லாம் ஒரு பொருட்டில்லை..
வார்த்தைகளின் வழி அணுக்கத்திற்கு..
ஆறுதலான பார்வைக்கு
அணைப்புக்கு ஏங்கும் மனிதர்கள்...
கிளைடர்கள் பறந்தும்
கருடன்கள் மீன்களோடும்
கங்காருக்கள் குட்டியுடன் துள்ளிக் கொண்டும் .
பலூனோ பட்டமோ ஆதாரக்கயிற்றில்
ஆடிக்கொண்டு மனசு..
ஃபெரிக்களும்., ஸ்கீயிங்கும்.,
க்ராஃப்டும் ., ஸர்ஃபிங்குமாய் .,
பாரா செய்லிங்கைப்போல
பறந்து பறந்து இறங்கி...
பக்கத்து வட்டுகளில்
கடந்து செல்வதே
வாழ்க்கையும் நட்பும்....

41 கருத்துகள்:

  1. Australia போயிட்டு வந்தீங்களா? கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  2. அழகு வரிகள் .... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  3. //சும்மா பக்கத்தில் அமர்ந்து
    இருப்பது கூட சுகமானதாய்...
    நட்புக்கும் காதலுக்கும்
    மேலானதொரு கரையாத உணர்வு...
    வயதெல்லாம் ஒரு பொருட்டில்லை..
    //

    சுகமானதாய்...

    //Australia போயிட்டு வந்தீங்களா? கலக்குங்க.//

    ரிப்பீட்டேய்...

    பதிலளிநீக்கு
  4. Chitra சொன்னது…
    Australia போயிட்டு வந்தீங்களா? கலக்குங்க.//

    அப்படியா..::))

    பதிலளிநீக்கு
  5. மனது பறக்கிறது கவிதையில்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. சும்மா பக்கத்தில் அமர்ந்து
    இருப்பது கூட சுகமானதாய்...

    இந்த உணர்வு அனுபவித்து ரசிக்க முடியும்..

    பதிலளிநீக்கு
  7. //Australia போயிட்டு வந்தீங்களா?//

    ரிப்பீட்... நல்லாவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. சித்ரா கேட்ட கேள்வியே இங்கு என்னிடம் இருந்தும்.... ஆஸ்திரேலியா பயணம் எப்படி??

    //வயதெல்லாம் ஒரு பொருட்டில்லை..
    வார்த்தைகளின் வழி அணுக்கத்திற்கு..
    ஆறுதலான பார்வைக்கு
    அணைப்புக்கு ஏங்கும் மனிதர்கள்...//

    ரொம்ப நல்லா இருக்கு தேனம்மை....

    இந்த கவிதை “காதலுக்கும், நட்புக்கும்” மரியாதை செய்கிறது.....

    வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  9. அனுபவ பகிர்வே வாழ்க்கை... சந்தோஷம்... கவிதை...

    பதிலளிநீக்கு
  10. நன்றி அண்ணாமலையான்
    நன்றி சித்ரா

    பதிலளிநீக்கு
  11. நன்றி பலா பட்டறை ஷங்கர்
    நன்றி சுஸ்ரி

    பதிலளிநீக்கு
  12. உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணகுமார்

    பதிலளிநீக்கு
  13. உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெற்றி

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஸ்டார்ஜன்

    உங்க அதிலென்ன சந்தேகம் சூப்பர் கேள்வி

    பதிலளிநீக்கு
  15. நன்றி நேசன் தயாரித்த கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  16. நன்றி கோபிநாத்
    நன்றி ரிஷபன்

    பதிலளிநீக்கு
  17. நன்றி கோபி
    நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

    பதிலளிநீக்கு
  18. நன்றி ராமமூர்த்தி

    அருமையான கதை தினமணிகதிரில் வெளிவந்து இருக்கிறதே பாராட்டுக்கள்
    ராமமூர்த்தி

    பதிலளிநீக்கு
  19. 'சும்மா" கலக்குறீங்க தேனு.

    வலை உலகின் நல்ல கவிதை தளத்திற்கென்ற இடம் நோக்கி நகர தொடங்கிவிட்டீர்கள் தேனு.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. நட்பின் பலமும் காதலின் பாசமும் கவிதை.அழகு.

    பதிலளிநீக்கு
  21. நன்றி மக்கா
    நன்றி முனியப்பன் சார்
    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...