எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 மே, 2018

கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.

கானாடுகாத்தானில் கம்பீரமாக இன்றும் நிற்கும் வீடொன்றின் முன்புறம். நன்றாக 931 * மராமத்து செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே பழமையின் விரிசல்கள். மிக உயரமான வீடுகள் என்பதால் 932* இடிதாங்கும் கலசங்கள் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் பல கலசங்கள் கவின்மிகுஎழிலோடு காட்சி அளிக்கும்.

கீழே வீட்டின் பக்கவாட்டில் அரக்குநிறத்தில் காணப்படுவதுதான் 933 * செம்புறாங்கற்கள். இவை வீட்டின் அடித்தளம் அமைக்கப் பயன்படுகின்றன. இந்த செம்புறாங்கற்கள் பாறையாக இருக்கும். இவை செவ்வக வடிவில் வெட்டப்பட்டு பதிக்கப்படுகின்றன. பூமியின் கீழே எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. ஆனால் மேற்புறம் ஐந்து அடி உயரமாவது பதிக்கப்பட்டிருக்கும். வீட்டின் உள்புறத்தில் இந்த இடத்தில்தான் தரைத்தளம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். அதுவரை அடித்தளமே. மேலும் ஒவ்வொரு வீடும் பத்து படி அளவு உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரிப்பூம்பட்டினத்தில் வீடுகளைக் கடல் கொண்ட காரணத்தால் இங்கே வீடுகளை இவ்வளவு உயரத்தில் அமைத்து இருக்கிறார்கள்.
இந்த வீடும் கானாடுகாத்தானில் உள்ளதே. ஒரு 934* அனுவல்சமயம் எடுத்தேன். இரட்டைத் தூண்கள்.  ஆறு ஜோடித் தூண்கள் உள்ளன. இரண்டு பக்கமும் முன் கோப்பான மேல்மாடி அறைகள். பக்கவாட்டில் பார்த்தால் தெரியும் செம்புறாங்கற்களின் அடுக்கை.இங்கே அவை ஆறடி உயரம் இருக்கின்றன. மேலும் கெட்டியான சிமிண்டினால் பூசப்பட்டிருக்கின்றன.

தேக்குத் தூண்கள் இவ்வீடுகளில் மிகவும் ஸ்பெஷல்.

வீட்டைத் தாங்க கான்க்ரீட் பில்லர்கள் போல அவற்றை விட உறுதியாக பல்லாண்டுகளாகத் தாங்கிக் கொண்டிருக்கின்றன இந்தத் தூண்கள். தூண்களிலும் சிற்ப வேலைப்பாடுகளைப் பாருங்கள் அற்புதம். எப்படித்தான் கடைந்தார்களோ. அதுவும் ஒரே மாதிரி. எப்படித்தான் தூக்கி நிறுத்தினார்களோ. நடுவில் இரும்புப் பட்டிகளும் அழகூட்டும். நாற்புறமும் விரிந்த 935* கொடுங்கைகள் விதானத்தைத் தாங்குகின்றன. அவற்றின் மேலும் மரச்சட்டங்கள். கீழே கவிந்த 936* கல்தாமரைகள் மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன தூண்கள். பக்கவாட்டு 937* வரந்தைகளில் வண்ண ஓவியங்கள்.
இந்த வீட்டின் 938* சூரியப் பலகையும் நிலைக்கதவும் வெகு அழகு. அழகு என்று சொல்லிவிட்டால் மட்டும் அடங்காது. நீங்களே கண்ணாரக் கண்டு ரசியுங்கள்.
பொதுவாக 939* தெய்வீகத் திருமணங்களே வீட்டின் சூர்யப் பலகையில் இடம்பெறுகின்றன. அவை வீட்டை இன்னும் செழிப்பானதாக ஐஸ்வர்யம் மிக்கதாக, ஒற்றுமை உள்ளதாகக்  காவல்காக்கின்றன. நிலைவாசலின் பக்கவாட்டுகளிலும் அற்புதமாய் வடிக்கப்பட்டுள்ள மரச் சிற்பத் தொகுதியைப் பாருங்கள். அதில்  பிடரி சிலிர்க்கப் புரவிகள் தவ்வுகின்றன.  நடுவில் உள்ள தாமரை மொக்குகளுக்கு சில்வர் வார்னிஷ் அடிக்கப்பட்டுள்ளது.

சூரியப் பலகையின் மேலும் கீழும் கதவின் இருபுறமும் எத்தனை எத்தனை அடுக்குகளாய் மர மடிப்புகள். மேலே தெய்வத்திருவுருவை வணங்கும் தேவாதி தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், யக்ஷர்கள்.

நிலை வாசலின் இருபுறமும் வரிசைக்கு மூன்று வீதம் வட்டமாக செதுக்கப்பட்ட கிருஷ்ணலீலைகள். மேலே நடுவில் கருடன் காட்சி அளிப்பார்.

முழங்கால் அளவு உயரத்தில் நிலைவாசல் எங்கும் நாகங்கள். நாகநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் இவர்களின் வீட்டின் நிலை வாயிலிலும் ஒவ்வொரு அறையின் வாயிலிலும் மேலும் வளவைச் சுற்றி நிற்கும் கற்தூண்களிலும் நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. இங்கே பக்கத்துக்குப் பதினோரு வரிசை அடுக்கு வீதம் நாகங்கள் காணப்படுகின்றன.

நிலைவாசல் அருகே புரவிகளின் கீழ்ப்புறம் நிலையை அணைத்தாற்போலக் குட்டிச் சிற்பத் தூண்கள் காணப்படுவது இன்னும் சிறப்பு.
குமிழ் பொருத்திய மேல் விதானம்.  மரச்சட்டங்களால் செதுக்கப்பட்ட மேங்கோப்பு. அட்ஜஸ்டபிள் விளக்கு தொங்குகிறது. இதன் லாம்ப் ஷேட் பீங்கானால் ஆனது. பல்ப் மாட்டலாம்.
இது முகப்பு நடையின் முன்கோப்பு. தாழ்வாரமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த ரீப்பர் வேலைகள் எல்லாம் செய்யத் தெரிந்த பெருந்தச்சர்கள் ஏன் மரவேலை செய்யும் ஆசாரிகள் கூட இப்போது இருக்கிறார்களா தெரியவில்லை.
தாழ்வாரத்தைத் தாங்கும் தூண்.
மாடமாளிகை உப்பரிகை டைப்பில் இன்னொரு செட்டிநாட்டு இல்லம். வீட்டின் மையத்தில் உச்சியில் காவல் தெய்வங்கள். இங்கே லெக்ஷ்மியையும் வீட்டின் வெளியே நிலைபெறச் செய்திருப்பார்கள். லெக்ஷ்மி வெளியே சென்றுவிடுவாள் என்ற பயம் இல்லை ஏனெனில் 940* லெக்ஷ்மி உறையும் வீடு என்பதைக் காட்ட அவ்வாறு வைக்கிறார்கள்.
காரைக்குடியில் உள்ள இவ்வீடும் இப்படங்களோடு கலந்துவிட்டது. இதுவும் உள் அமைப்புகளிலும் அலங்காரங்களிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் சிறப்பான வீடே.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.




99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .

100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.

101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.

102. பழம்பெரும் வீடுகள்.

103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

105. 


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

5 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ எங்கள் ஊரில் சமீபத்தில் ஒரு செட்டியார் வீடு பாகம் பிரிப்பதால் இடித்தார்கள்.

    அந்த வீட்டின் பர்மா தேக்கு மரங்களும் பளிங்கு கற்களும் மட்டும் விலை போனது எவ்வளவு தெரியுமா ?

    ஒரு கோடியே அறுபது லட்சங்கள். இந்த வீட்டுக்குள் நான் மூன்றுமுறை சென்று வந்து இருக்கிறேன் மூன்றுமே திருமணங்கள் நடந்த நேரம்.

    பதிலளிநீக்கு
  2. அழகான வீடுகள். செட்டி நாட்டு வீடுகளே மிக மிக அழகாக இருக்கும்...படங்களில் நிறைய நடிக்கின்றனவே! அதற்காகவேறும் அழிக்காமல் இருக்க வேண்டும். என்ன அழகான வீடுகள் அனைத்தும். உட்புறம் செமையா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  3. செட்டிநாட்டுக் கட்டடக்கலை அழகு. நேர்த்தியான விளக்கம்

    பதிலளிநீக்கு
  4. அடேயப்பா. கில்லர்ஜி விவரம் அருமை. அதே சமயம் சோகமும் கூட :(

    நன்றி கீத்ஸ்

    நன்றி டிடி சகோ

    நன்றி ரமேஷ் ராமர்

    நன்றி முத்துசாமி சகோ

    நன்றி ஆரூர் பாஸ்கர் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...