சாட்டர்டே போஸ்டில் இன்று ஒரு வித்யாசமான தகவலுடன் திரு விவிஎஸ் சார் அவர்கள் உஙக்ளை சந்திக்கிறார்கள்.
![]() |
முன்னோர் அஸ்தியை வைத்து செடியை நட்டுவிடுகிறார்கள். அப்படி வளர்ந்த செடி இது. வருடா வருடம் குடும்பத்தினர் அங்கே சென்று தியானம் செய்கிறாரகள். |
அந்த ஐந்து பேருக்கு நன்றி !
“ஸார், நா எல் ஐ சி-ல ஒரு ஜீவன் ஆனந்த் பாலிஸி போட்டேன். ஒரு லட்சத்துக்கு. 15 வருஷ டேர்ம்(term). 7200 ரூபா பிரீமியம். அடுத்த வருஷம் மெச்சூர் ஆகுது. மெச்சூரிடீ அமவுண்ட் 140000 ரூபா வரும்ன்னு சொல்றாங்க. என்ன ஸார் இது அநியாயமா இருக்கு ? நா கட்டினது ஒரு லட்சத்தி பத்தாயிரம். அதுக்கு வெறும் முப்பதாயிரம் ரூபா மட்டும்தான் பெனிஃபிட்டா ?”
ஒரு தொலைக்காட்சி நேரலையில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி இது. கேள்வி என்று கூடச் சொல்ல முடியாது. புகார்.
இந்தியாவிலேயே, ஏன் இந்த வேர்ல்ட்லேயே ஜீவன் ஆனந்த் பாலிஸி ஒரு பெஸ்ட் பாலிஸி. (கரகாட்டக்காரன் கவுண்டமணி வாய்ஸில் படிக்கவும்.)