எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
CHETTINAD MUTTON KUZHAMBU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CHETTINAD MUTTON KUZHAMBU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 ஜூலை, 2017

சுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி ? – பேச்சிலர் சமையல்.



முதல்ல அரை கப் அரிசி எடுத்து இண்டக்‌ஷன் குக்கர்ல போட்டு கழுவியோ கழுவாமலோ இரண்டரை கப் தண்ணீர் ஊத்தி சோறு வைக்கணும். அட சோறு சமைச்சாத்தானுங்களே கறிக்குழம்போட சாப்பிட முடியும். குழம்பையும் அதே குக்கர்ல வைக்கப் போறதால முதல்ல சாதம் வைச்சா வீசாம இருக்கும். வெந்துச்சோ வேகலையோன்னு ஒரு சவுண்ட்ல அமத்திட்டு லாப்டாப் பாக்கணும். ஹாஹா.

அடுத்து பத்து நிமிஷம் கழிச்சு நெனைப்பு வந்தாப்புல குக்கரை அடுப்புல இன்னொரு சவுண்ட் வர வரைக்கும் வைச்சு ஆஃப் சேசு. சோறு எப்பிடியும் ஆயிடும். உள்ளே இருக்க பயபுள்ள ப்ரஷர் வேகாம விடுமா என்ன.

அட சோறு வெந்தேபூடுச்சுபா. J
 
சரி சோத்தை அப்பிடிக்கா ஒரு பாத்துரத்துல மாத்திட்டு லேசா கயிவினா போதும்.



கால்கிலோ கறியக் கழுவி அப்பாலிக்கா வைச்சிடணும். ரொம்பக் கழுவினா ருசி போயிடும். நல்லா தண்ணியப் பிழிஞ்சு மூடிபோட்டு வைக்கணும். 

பத்துப் பன்னெண்டு சின்ன வெங்காயம் ஏழெட்டு வெள்ளைப்பூண்டு, ஒரு தக்காளி இதெல்லாத்தையும் சுத்தமா உரிச்சி நறுக்கி வைக்கணும்.



கொத்துமல்லியையும் சுத்தம் செய்து வைக்கணும்.

ஒரு பவுல்ல ஒரு டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லிப்பொடியைப் போட்டுக் கலக்கி வைக்கணும். பொடி பத்தலன்னா வீட்ல இருக்குற கரம் மசாலா, கறிமசால்பொடி, சாம்பார் பொடி சேர்த்துக்கலாம். ஆனா ஆம்சூர் மட்டும் சேர்க்கக்கூடாது J

Related Posts Plugin for WordPress, Blogger...