எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
BHISHMA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BHISHMA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

வாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - 13.


வாக்கைக் காத்த கங்காதத்தன்.

சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறது. குருக்ஷேத்திரப் போர் பூமி. ரத்தமும் சதையும் நாலாபக்கம் நிண வாசமுமாக இருக்கிறது. எட்டாம் நாள் போர் அது. அங்கே அம்புகளையே படுக்கையாகக் கொண்டு ஒருவர் வீழ்ந்து கிடக்கிறார். என்னது அம்புப் படுக்கையா ஆம் அம்புப் படுக்கையேதான். அவ்வளவு மனோ வலிமை வாய்ந்தவர் யார்.?

விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் துதித்தபடி வானோக்கி இருக்கிறது அந்த தேஜசான முகம். யார் முகம் அது ? நெருங்கிப் போய்ப் பார்ப்போமா. அஹா இது கங்கையின் புதல்வன் தேவவிரனின் முகம் அல்லவா. தந்தைக்காக திருமணம் மறுத்து பிரம்மச்சர்ய விரதம் பூண்ட பீஷ்ம பிதாமகர் அல்லவா அங்கே வீழ்ந்து கிடக்கிறார்.

கௌரவப் படையின் சேனாபதியான அவர் மட்டுமா வீழ்ந்து கிடக்கிறார் .  அநியாயத்தின் பக்கம் நின்றதால் அங்கே சத்தியமும் வாக்கு தத்தமும் அல்லவா வீழ்ந்து கிடக்கிறது. அவரை வீழ்த்தியது எது ?

அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அஸ்தினாபுரம் அரண்மனைக்குப் போவோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...