பக்தியால் வென்ற சுதர்சனன்
பிறந்த சில காலத்திற்குள் பெற்ற தந்தையையும் பிறந்த பொன்னாட்டையும் விதிவசத்தால் இழந்தான் ஒரு ராஜகுமாரன். ஆனால் பராசக்தியின் மேல் பக்தி வைத்ததால் தான் இழந்த நாட்டையும் அரச பதவியையும் திரும்பப் பெற்றான் அவன். அவனது அபரிமித பக்தியால் அன்பகலாத மனைவியும் கிடைத்தாள். அவனுடைய கதையைப் பார்ப்போம்.
கோசல நாட்டை சூரிய வம்சத்தில் தோன்றிய துருவசிந்து என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவனுக்கு மனோரமா என்ற பட்டத்து ராணியும், லீலாவதி என்ற ஆசை மனைவியும் உண்டு. ஒரே சமயம் இருவரும் கருத்தரித்து மனோரமாவுக்கு சுதர்சனன் என்ற மகனும், லீலாவதிக்கு சத்ருஜித் என்ற மகனும் பிறந்தார்கள்.
ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் துருவசிந்து. பாய்ந்து வந்தது சிங்கம் ஒன்று. மன்னன் தன் வலிமை முழுவதும் காட்டிப் போரிட்டும் அது மன்னனைக் கடித்துக் கொன்று விட்டது. உடனே நாட்டில் ஆரம்பித்து விட்டது சத்ருஜித் மற்றும் சுதர்சனனின் வாரிசுரிமைப் போராட்டம்.
