எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தொன்மக்கலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொன்மக்கலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜூன், 2018

தெலுங்கானா பொம்மலாட்டமும் துள்ளியெழுந்த பாம்பும்.

ஹைதராபாத் ஷில்பாராமத்தில் சோகன்லால் பட் இயக்கிய பொம்மலாட்டத்தில்தான் இத்தனை கலாட்டாவும். இதனை தெலுங்கில் காத்புட்லி ( KATHPUTLI ) என்கிறார்கள்.

தோல்பாவைக் கூத்துகள், பொம்மலாட்டங்கள் ஆகியன இரண்டு மூன்று ( நௌதங்கி சாலை ஓர உணவகமான சைபர் பேர்ள் ( CYBER PEARL ) மற்றும் மாதாப்பூர் ஒலிம்பியா மித்தாய் ஷாப்பிலும்) உணவகங்களிலும் நடப்பதாகக் கூறுகிறார்கள்.

ஹைதையில் பொது நிகழ்வுகள், திருவிழாக்கள், கலாச்சார கிராமத்தின் கோடைத்திருவிழா, மக்கள் கூடுமிடங்கள், சந்தை ஆகியவற்றில் கூட இந்த பொம்மலாட்டங்கள் ( பப்பட் ஷோ ) நிகழ்த்தப்படுகின்றன. ஹைதை மக்கள் மிக விரும்பிப் பார்க்கும் ஷோ இது எனலாம். குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த ஷோவும் கூட.

வியாழன், 24 மே, 2018

பூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்

மதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள்.

பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி
பூம் பூம் பூம் மேளம் கொட்டி சேதி சொன்னாண்டி.
அரிசி போட வெளியில் வந்த பெண்ணைப் பார்த்தாண்டி
அடுத்த மாதம் கல்யாணத்துக்கு சேதி சொன்னாண்டி.

இந்தப் பாடலில் வரும் பூம் பூம் மாடு நாங்கள் சின்னப் பிள்ளையில் பார்த்தது.  பூம் பூம் மாடு, சாட்டையடி சோளகா, கம்பி மேல் நடக்கும் நெருப்பு வளையத்துள் பாயும் கழைக்கூத்தாடிகள், பாம்புப் பிடாரன்கள், குரங்காட்டிகள், போன்ற தெருவோர வித்தைக்காரர்களை அக்காலத்தில் பார்க்கலாம்.

இன்றும் கோவைக்குச் சென்றிருந்தபோது பாலிடெக்னிக் அருகே ஒரு பூம் பூம் மாட்டைப் பார்த்தேன். அது மாட்டுக்காரரின் மேள தாளத்துக்கு ஏற்ப பூம் பூம் என்று தலையாட்டியபடி வந்தது. பலவகையான துணிகளையும் அணிமணிகளையும் அணிந்திருந்த அது கண்ணைக் கவர்ந்தது.

ஆனால் அந்த மாட்டுக்காரரின் அன்றாடப்பாடோ வெகு பாடு.
தோளில் மேளத்தை மாட்டிக் கடை கடையாக நின்று காசு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சொல்லிய நற்பலனுக்கெல்லாம் ஜீவ சாட்சியாய் ஆமோதித்துத் தலையாட்டிக் கொண்டிருந்தது அந்த மாடு.
Related Posts Plugin for WordPress, Blogger...