முகநூலில் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு நாராயணன் சார் அவர்கள் தினமும் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்து இருப்பார்கள். அந்த இன்சொற்களையும் வாழ்த்துகளையும் படிக்கும்போதே நாட்கள் இனிமை மயமாகிவிடும். மனிதநேயமிக்க பண்பாளர். :)
மிகப் பெரும் ப்ரபலங்களுடன் புகைப்படம் இருக்கும். ஆனால் எளிமையானவர், இனிமையானவர் திரு நாராயணன் சார் அவர்கள். அவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் தேவர் தேவியைப் பார்த்ததுபோல் இருக்கும்.
அவருடைய நித்யப் ப்ரார்த்தனையும் மிகப் பிடித்த ஒன்று. எனவே அவருடைய ஆன்மீகப் பார்வையை கட்டுரையாக்கி அனுப்பி வைக்க வேண்டி இருந்தேன்.
அதே சமயம் அவர் ஆங்கிலத்திலும் எழுதி வருவதால் நீங்கள் விரும்பும் எதையும் எழுதி அனுப்பலாம், ஆனால் அது தமிழில் இருந்தால் பலருக்குப் புரியும் படிப்பார்கள் என்று கூறி இருந்தேன். (ஆங்கிலம் என்றாலும் படிப்பார்கள் ஆனால் குறைந்த அளவில்தான். அதன் ரீடர்ஸ் வேறு ரகம். )
சாம்பிளுக்கு அவருடைய சிந்தனையைத் தூண்டும் சில பகிர்வுகளை இங்கே பகிர்ந்துள்ளேன்.
///எனதுயிரினும் மேலான நண்பர்களே..........................
உங்களனைவருக்கும் குடும்பத்தாருக்கும் எங்களதுசிரம்தாழ் பணிவான இனிய நற்காலை வணக்கங்களும்,
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளுடன்!
உங்களனைவருக்குமான எங்களது நித்திய பிரார்த்தனைகள்
எங்களிடம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்!
-----------------------------------------------------------------------------------
சிந்தனை: பச்சை குத்தி சிவப்பு ரணம்....தேவையா?
-----------------------------------------------------------------------------------
அரிசி மாவு, கோலமாவு கொண்டு நாம் வீட்டு
வாசல் சாணமிட்டு நீர் தெளித்து, கோலம் போட்டு
வீட்டை லட்சுமிகரமாக நன்மைகள் வேண்டி நன்மை
செய்யும் கிரஹமாக அலெட்சுமியை விரட்டி அழகுற
வைத்திருப்போம்.
எங்களிடம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்!
-----------------------------------------------------------------------------------
சிந்தனை: பச்சை குத்தி சிவப்பு ரணம்....தேவையா?
-----------------------------------------------------------------------------------
அரிசி மாவு, கோலமாவு கொண்டு நாம் வீட்டு
வாசல் சாணமிட்டு நீர் தெளித்து, கோலம் போட்டு
வீட்டை லட்சுமிகரமாக நன்மைகள் வேண்டி நன்மை
செய்யும் கிரஹமாக அலெட்சுமியை விரட்டி அழகுற
வைத்திருப்போம்.