எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கல்வீணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வீணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 செப்டம்பர், 2017

பிதார் கோட்டையில் கல்வீணை ?!

பஹாமனியர்கள், முகம்மது பின் துக்ளக், பிஜப்பூர் சுல்தான், நிஜாம்கள், முகலாயர்கள் என்று பலர்  கை மாறினாலும் இன்னும் அழகும் எழிலும் மிச்சமிருக்கும் இடம் மொஹமதாபாத் என்று முன்னர் அழைக்கப்பட்ட பிதார் கோட்டை.

பிதார் கோட்டை போட்டோகிராபர்களின் டிலைட் எனலாம். எங்கெங்கு பார்த்தாலும் சிதைந்த இடத்திலும் கொள்ளை அழகு கொட்டிக் கிடைக்குமிடம் பிதார்.

பெர்சியன், துருக்கிய, இஸ்லாமிக் , இந்தியக் கட்டிடக்கலைக்கு கூட்டான எடுத்துக்காட்டு இந்தக் கோட்டை.

இந்தத் தூண் சிற்பத்தில் இந்திய அரசனும் நடனமங்கையரும் . மேலே குதிரை சிங்கம் யாளி யானை ஆகியன அணிவகுக்கின்றன .ரோஜாப்பூக்கள், சிவலிங்கங்கள் நாகங்கள் கூட. பெர்சியன் கலைக்கு  நடுவில் குறுக்கு கோடுகளும், சதுரமும்  பூக்களும்.
கிரானைட் தாமரை இல்லை இது, மினி வாட்டர் ஃபவுண்டன்.
Related Posts Plugin for WordPress, Blogger...