எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 28 டிசம்பர், 2012
மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். -- சிற்றிதழ்கள் ஒரு பார்வை
வியாழன், 27 டிசம்பர், 2012
கிளம்பவேண்டிய நேரம்
நீங்கள் கிளம்பவேண்டிய
நேரம் வந்துவிட்டது.
நொடிக்கணக்குடன் துல்லியமாய்.
ஒரு புத்தக வாசிப்பு
பாதிப்பக்கங்களில்
சுவாரசியம் தீர்க்காமல்
உங்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது.
புதன், 26 டிசம்பர், 2012
அசூயை.
இருந்திருக்கவில்லை
அந்த உணர்வு.
புரவி பிடறி சிலிர்க்க
ஓடியபோதும்
வியர்த்திருந்தது.
காணாத ஒன்றைக்
கண்டதாய்
பொய்ப்பித்தது கண்.
சனி, 22 டிசம்பர், 2012
வெள்ளி, 21 டிசம்பர், 2012
முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை
டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2,ஏப்ரல் 2012, திண்ணையில் வெளியானது.
வியாழன், 20 டிசம்பர், 2012
பூவரசி அரையாண்டிதழ். எனது பார்வையில்
டிஸ்கி:- இந்தக் கட்டுரை 4, மார்ச் 2012 திண்ணையில் வெளியானது.
புதன், 19 டிசம்பர், 2012
சேமிப்பு
”சம்பளம் இன்னும் அதிகம் வரட்டும்மா.. எப்பப்பாரு டெபாசிட் போடு அப்பிடிங்கிறீங்க. அப்புறம் எப்பத்தான் லைஃபை என்ஜாய் செய்றது”.
மகன் வேலைக்கு சேர்ந்து முணு மாதமாக வீட்டில் நடக்கும் வாக்குவாதம்தான் இதெல்லாம்.
செவ்வாய், 18 டிசம்பர், 2012
மகாபலிபுரம்,, உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி. நூல் விமர்சனம்
டிஸ்கி:- இந்தக் கட்டுரை 13, ஃபிப்ரவரி, 2012 திண்ணையில் வெளியானது.
திங்கள், 17 டிசம்பர், 2012
அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்
முக்கியமா அது ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் அல்லது சேரன் அல்லது ப்ளூ மவுண்டனா கூட இருக்கலாம். கொஞ்சம் இருங்க வெயிட் லாசுக்காக உங்களை மலை எல்லாம் ஏற சொல்லலை. நீலகிரி எக்ஸ்ப்ரஸைத்தான் அப்பிடிச் சொன்னேன். அப்புறம் முக்கியமா. ராத்திரி ட்ரெயினுக்கு புக் பண்ணுங்க.அதுவும் கடைசி சமயத்துலதான் தட்கால்ல புக் பண்ணனும் . அப்பத்தான் நம்ம கோச்சே இருக்கோ இல்லையோன்னு தேடிக்கிட்டே போனாம்னா ஏ1., ஏ2.,ஏ3., ஏ4 இது போல பி1 லேருந்து பி 4 வரை அப்புறம் ஏசி கோச். அப்புறம் எஸ் 1 எஸ் 2 லேருந்து எஸ் 11 வரைக்கும் இருக்கும். ஆனா எஸ் 12 இருக்காது. அதுக்குத்தான் நீங்க டிக்கட் புக் பண்ணி இருப்பீங்க. நீங்க நடந்து நடந்து கடைசியா எஞ்சினே வரபோகுது. ஒரு வேளை பாத யாத்திரையாவே போகப்போறமோன்னு நினைக்கும்போது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் அப்புறம் கொஞ்சம் லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் அதுக்கும் அப்புறம் எஞ்சின் பக்கத்துல அப்பாடா உங்க எஸ் 12 வந்திருச்சு. சரி விருவிருன்னு ஏறி உக்காருங்க..அடுத்த ஊருக்க்கே வந்துட்டமோன்னு களைப்பா நடந்து வந்த நேரத்துல ட்ரெயின் கிளம்பிறப்போகுது.
செவ்வாய், 11 டிசம்பர், 2012
இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்
இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள்
என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை எழுதிய எழுத்தாளனுக்கும் உண்மையாய் இருக்க வேண்டும். தன் கருத்து. ஒர் சார்பு நிலை எந்த இடத்திலும் வெளிப்பட்டுவிடாமல் காக்க வேண்டும். ஒரு சிருஷ்டிகர்த்தாவை விட கடினமான பணி அதைப் போன்ற குறைவில்லாத உயிர் சிற்பம் செய்வதே. அசலின் எல்லா குணங்களும் நகலிடமும் இருக்கவேண்டும்., எந்தச் செதுக்கலும் இல்லாமல். இதை சிறப்புறச் செய்திருப்பதால் இந்த நூல் பலவருடம் கழித்தும் என் கவனத்தை மிக ஈர்த்தது. இதன் ஆசிரியர் கே.என். மகாலிங்கம். இதற்கு அ. முத்துலிங்கம் கொடுத்துள்ள முன்னுரை ரத்னஹாரத்தில் நடுவில் பதித்த வைரம் போன்றது. .
திங்கள், 10 டிசம்பர், 2012
சனி, 8 டிசம்பர், 2012
வெள்ளி, 7 டிசம்பர், 2012
மூளையும் நாவும்.
சித்திரங்கள் வரைவது
பிடித்தமானது அவளுக்கு.
வரையும்போதே வண்ணங்கள்
சிதறி விழுகின்றன
மண்ணாய் அங்குமிங்கும்.
மூளை மூடாமல் திறந்து கிடக்கிறது
மண்டையோட்டுக்கான
வண்ணம் போதாமல்.
வியாழன், 6 டிசம்பர், 2012
குளம்.
பாசம் புதையக் காத்திருந்தது குளம்.
தட்டுச் சுற்றான வேட்டியுடன்
தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன்.
விரால் மீன்களாய் விழுந்து
துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள்.
இரவுக்குள் ஒளிய நினைத்து
கருக்கத் துவங்கியது தண்ணீர்.
புதன், 5 டிசம்பர், 2012
சுத்த மோசம்.
“அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா.
“என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை” வருத்தப்பட்டான் ரமேஷ் அடுத்தபக்கத்தில் இருந்த ஒரு சினிமா ஸ்டில்லைப் பார்த்து.
செவ்வாய், 4 டிசம்பர், 2012
மந்திரப்பூனை. நூல் பார்வை..
பூமியில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திலும் வரலாறு நிறைந்து கிடப்பது போல ஒவ்வொரு எழுத்தாளரிலும் ஒவ்வொரு வாழ்க்கைக்கான வரலாறு புதைந்து கிடக்கிறது. அதை எவ்வாறு எந்த அளவு சிறப்போடும் ஈர்ப்போடும் எளிமையோடும் பகிர்கிறாரோ அந்த அளவு அது காப்பியமாக ஆகிறது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட வைக்கம் முகம்மது பஷீரின் மந்திரப் பூனை நாவல் படித்தேன். தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. பலமுறை படித்தும் சுவாரசியம் அடங்கவில்லை. மொழிபெயர்ப்பே இவ்வளவு சுவாரசியம் என்றால் மூலம் எப்படி இருக்கும். மலையாளம் தெரியவில்லையே என்ற ஏக்கம் உண்டானது


