எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 ஜூன், 2020

தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

1561. கோவில் மாலை வருதல் :- கோவிலில் பாக்கு வைத்து மணமக்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்தபின் திருமணத்தன்று முதல்நாள் கோவில் மாலை வரும். இதை சங்கு ஊதி வாங்கி வைத்துக் கொண்டு வந்த அர்ச்சகருக்கு ( குலதெய்வக் கோவிலில் இருந்து கொண்டு வரும் வேளாருக்கும் ) சில்வர் வாளியில் பழம் தேங்காய் பிஸ்கட்  பணம் வைத்துக் கொடுப்பார்கள்.

1562. நிச்சயம் செய்தல் :- திருமணத்தன்று முதல்நாள் மாப்பிள்ளை வீட்டிலோ பெண் வீட்டிலோ கல்யாணத்தைப் பேசி முடித்து நிச்சயம் செய்து கொள்வார்கள். காலைப் பலகாரம் பேசி முடித்துக் கொள்ளும் வீட்டில் நடைபெறும். இதற்கு மாப்பிள்ளை வீட்டார் பதினொன்று பதினாறு என்ற வகையில் சீர்வரிசை எடுத்துச் செல்வார்கள். அண்டாவில் மஞ்சள் தடவிய தேங்காய் 31, வாழைப்பழச் சீப்பு ( மலைப்பழம் அல்லது செவ்வாழை ) 51 அல்லது 101, சாத்துக்குடி - 16, ஆரஞ்சு - 16, ஆப்பிள்- 16, திராட்சை - 2 கிலோ, மாதுளை - 16, எலுமிச்சை - 21, பேரீச்சம்பழம் - பெரிய பாக்கெட், கல்கண்டு - 1 கிலோ, வெளிநாட்டு பிஸ்கட் - 1 டின் , வேஃபர்ஸ் - 1 டின்,  வெளிநாட்டுச் சாக்லெட் - 1 டின், வெற்றிலை - 5 கவுளி, பாக்கு - 1 கிலோ, மல்லிகைப் பூ - 3 பந்து, இவை வைக்க சில்வர் அண்டா, பேஸின், வாளிகள் தூக்குச் சட்டிகள் எடுத்துச் சென்று பரப்புவார்கள். பெண் வீட்டில் இந்த முறையில் கொஞ்சம் திருப்பித் தருவார்கள்.   

1563. முகூர்த்தம் வைத்தல்/ கழுத்துருவுக்குப் பொன் தட்டுதல்/ கொடுத்தல் :- கழுத்துருவைப் பெண் வீட்டில் முன்பே செய்து வைத்திருப்பார்கள். அதனால் மாப்பிள்ளை வீட்டில் பொற்கொல்லரை அழைத்துச் சென்று புதிதாகப் பவுனைக் கொடுத்துத் தட்டித்தரச் சொல்லி அதைக் கழுத்துரு செய்யும்போது சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள். அந்தக்காலத்தில் ஏழுநாள் திருமணம் என்பதால் பொன் கொடுத்துத் தட்டிச் சேர்த்துக் கொள்ளச் சொல்லும் பழக்கம் இருந்தது. இந்த நாளிலும் அது ஒரு நாள் திருமணமாகச் சுருங்கிய பின்னும் இந்த முறைகளைப் பின்பற்றுகிறோம்.


1564. கூடி ஆக்கி உண்ணுதல்:- பெண்/மாப்பிள்ளையின் அப்பத்தாவீட்டு ஆயாவீட்டு உறவினர்கள் கூடப்பிறந்தவர்கள் வீட்டுக்காரர்கள் தாயாதி பங்காளிகள் அனைவரும் திருமணத்துக்கு முதல்நாள் மதியமே கூடி விருந்து உண்பதுதான் கூடி ஆக்கி உண்பது.

1565. பால்பழம் வைத்துக் கும்பிடுவது :- திருமணத்துக்கு முதல்நாள் ஐயா அப்பத்தா பாட்டையா போன்ற உறவினர்களின் ஆசி வேண்டி பால் பழம் வெள்ளைப்பணியாரம் வடை மற்றும் அவர்களுக்குப் பிடித்ததைச் செய்து வைத்து வணங்குவார்கள்.

1566. தும்பு பிடித்தல் :- கல்யாணத்துக்கு முதல்நாள் மாலை வீட்டில் இருக்கும் மூத்த பெண்களும் பங்காளி வீட்டுப் பெண்களும் சாமி அறையின் சுவரில் ஏடு/ஓலைச்சுவடியினைச் சுற்றிய கயிறினைக் கோலமாவில் நனைத்து வீடு அமைப்பில் கோலமிடுவார்கள். ஒருவர் கயிறினைக் கோலமாவில் தோய்த்துச் சுவரில் இருகைகளாலும் சுமார் ஓரடிஅளவு இடைவெளியுடன் பிடித்திருக்க இன்னொருவர் அதை மத்தியில் பிடித்து இழுத்து விடுவார்.அப்போது அந்த நூல் ட்வைன் நூல் போல் விசையுடன் சுடரில் மோதிக் கோடுகள் உண்டாகும். நான்கு பக்கமும் நான்கு கோடுகளும் நடுவில் பெருக்கல் குறி போன்ற கோடுகளும், மேலே கோபுரம் போன்ற கோடுகளும் வரைவார்கள். இதற்குத் தும்பு பிடித்தல் என்று பெயர். ஏட்டில் உள்ள கயிறைத்தான் தும்பு என்கிறார்கள். மங்கல நிகழ்வு ஆரம்பிக்கும் போதெல்லாம் பொங்கல் தீபாவளி பிள்ளையார் நோன்பு போன்ற நிகழ்வுகளிலும் சாமி வீட்டில் தும்பு பிடித்து அதன் பின் தான் தரையில் நடுவீட்டுக் கோலமிடுவார்கள்.

1567. நடுவீட்டுக் கோலம் :- தும்பு பிடித்தபின் பங்காளி வீட்டாரும் உறவினரும் வளவில் இருக்கும் சாமி வீட்டில் சங்கு ஊதிக் கோலமிடுவர். இது தேர்போன்ற அமைப்பில் போடப்படுவது. நடுவில் சதுரம் அது இரட்டைக் கோடுகளாலும் குறுக்குக் கோடுகளாலும் ஆனது. குறுக்காகப் போடப்படும் நெளிக் கோடுகளை முடக்குப் போடுதல் என்பார்கள். அதன் எண்புறமும் தேர்க்கால் . நான்கு சதுரப் பக்கம் தேர்க்கோபுரம் போடவேண்டும். தேர்க்கால்ப் பக்கம் வாழைப்பூ, சங்கு போன்றவை போடுவார்கள். அதன் பின் இரட்டைவரிசையில் புள்ளி குத்துவார்கள். இதேபோல் வீட்டின் நிலையிலும் மாப்பிள்ளை அழைக்கக் கோலமிடுவார்கள். படிகளிலும் படிக்கோலம் போடுவார்கள். மணை போடும் இடத்திலும் மணையிலும் கூடக் கோலமிட்டு வைப்பார்கள்.

1568. பாப்பாரக் கோலம்.:- இது பெண் வீட்டில் மறுநாள் காலையில் பூரம் கழிக்கப் போடப்படுவது. மணைபோடும் இடத்துக்குப் பக்கத்திலேயே இந்தக் கோலத்தைப் போடுவார்கள். ஸ்வஸ்திக்கை அநேகக் கோடுகளால் மூடியதுபோல் அமைந்திருக்கும் இக்கோலம். நான்கு பக்கமும் தோரணம் உண்டு. இதில் மணப்பெண் அதிகாலையில் குளித்து முழுகி சரமாலை அணிந்து கோலத்தின் மேல் போட்ட தடுக்கில் கிழக்குப் பார்த்து நிற்க அவள் தலை, தோள், இடுப்பு, கால் போன்ற ஏழு இடங்களில் பூரங்கழிக்க அடை அல்லது பிஸ்கட் வைத்து வேப்பிலையால் அதைத் தட்டி விடுவார்கள்.  

1569. மணை போடுதல் :- திருமணம் மணையில் நின்றுதான் நடக்கும். அவரவர் ஊர் வழக்கப்படி மாப்பிள்ளையோ பெண்ணோ மணையின் மேல் நின்றிருக்க மாப்பிள்ளை திருப்பூட்டுவார். மற்ற சடங்குகளும் இதில்தான் நடைபெறும். உள்ளூர்த் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை, பெண் இருவர் வீட்டிலும் மணை போடுவார்கள். வெளியூர்த்திருமணமாக இருந்தால் பெண் வீட்டில் மட்டும் மணை போடுவார்கள். திருமணம் நடக்கும் சாமி வீட்டின் எதிரில் நன்கு சுத்தம் செய்து கோலம் போட்டு வைப்பார்கள். அதன் மேல் பங்காளி மற்றும் உறவினர் பெண்கள்  செங்கல் வைத்துக் குழைத்த மண்ணை மூன்று இடங்களில் வைத்து மஞ்சள் குங்குமம் பூ வைப்பார்கள். இதை 11, 16, 21 ( பெண்கள் ) என்ற எண்ணிக்கையில் வைப்பார்கள். இதன் மேல் மரத்தால் அல்லது பளிங்கால் ஆன கோலமிட்ட மணையை ஒற்றைப்படை எண்ணிக்கையில் 5, 7 உள்ள பெண்கள் வைப்பார்கள்.

1570. மிஞ்சி போடுதல் :- கோலமிடுதல் முடிந்ததும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி போடுவார்கள். இந்த மிஞ்சி போட்டால் திருமணம் முடிந்து கழட்டும் வரை அவர் இல்லத்தை விட்டு எங்கும் செல்லக் கூடாது. மாப்பிள்ளை தடுக்கில் நிற்க மாமப் பட்டு அணிந்து தாய்மாமன் மாப்பிள்ளைக்குக் காலில் கெட்டியான ஒற்றை மிஞ்சி அணிவிப்பார். காலில் போட முடியாவிட்டால் அதை சரி செய்து தர பக்கத்திலேயே பொற்கொல்லரும் இருப்பார். இந்த மிஞ்சி போடுவதில் துவங்கி மறுநாள் பெண்ணழைத்து விடுவது வரை மாப்பிள்ளையின் தாய்மாமனின் பங்கு திருமணத்தில் அதிகம்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


















































129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும். 


130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

131.காரைக்குடி முனியையா கோயில்.

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

137. வட்டாரப் பழமொழிகள் - 4 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

147. பேர் பெற்ற வீடு.

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

150. பூசைச் சாப்பாடு.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

2 கருத்துகள்:

  1. நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...